செப். 15க்குள் பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 21, 2023

செப். 15க்குள் பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை, ஜூலை 21 - சமூக நீதிக்காக பாடு படுபவர்களை சிறப்பிப்பதற்காக "சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" 1995ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், 1 பவுன் தங்கப் பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது.

இவ்விருதாளர் முதலமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார். 2023ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் "சமூக நீதிக் கான தந்தை பெரியார் விருது" வழங்குவ தற்கு, உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.

எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திட, மேற்கொள்ளப்பட்ட பணி கள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள், ஆகிய தகுதிகள் உடை யவர்கள் தங்களது விண்ணப்பத்தினை விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பம் தங்களின் சுயவிவரம், முழு முகவரி, அலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்து விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கி யதாக இருத்தல் வேண்டும். 2023ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியருக்கு வந்து சேர வேண் டிய கடைசி நாள் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி ஆகும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment