பொதுக்குழு தீர்மானங்களை நிறைவேற்றுவதென பாடலூர் ஒன்றிய கலந்துரையாடலில் முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 30, 2023

பொதுக்குழு தீர்மானங்களை நிறைவேற்றுவதென பாடலூர் ஒன்றிய கலந்துரையாடலில் முடிவு

பெரம்பலூர், ஜூன் 30 - பெரம்பலூர் மாவட்டம்ஆலத்தூர் ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம் 29.6.2023 அன்று மாலை 5 மணியளவில் பாடலூர் ரமேஷ் சிகை திருத்தக வளாகத்தில் தலைமைக் கழக அமைப்பாளர் க.சிந்தனைச் செல்வன் தலைமையில் சிறப்பாக நடை பெற்றது.

பெரம்பலூர் மாவட்ட தலைவர் சி. தங்கராசு, மாவட்ட செயலா ளர் மு.விஜயேந்திரன், மாவட்ட இளைஞரணி தலைவர் செ. தமிழரசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் அ.சரவணன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். தோழர்கள் தங்களை அறிமுகம் செய்த பின்னர் இயக்கப்பணிகள், செயல்முறைகள் குறித்து கலந்து ரையாடப்பட்டது.

கழகப் பொதுக்குழு தீர்மானங்களை சிறப்பாக செயல்படுத்துவ தெனவும், கிளைகள் தோறும் கொடியேற்றுவதெனவும், வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா - தெருமுனைக் கூட்டங்களை சிறப்பாக நடத்திடவும் முடிவு செய்யப்பட்டது.

பங்கேற்றோர்: கூட்டத்தில் ஆலத்தூர் ஒன்றிய தலைவர் வி. ரவிக்குமார், ஒன்றிய செயலாளர் அரங்க.வேலாயுதம், மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் இர.மணிமேகலை, வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் இரா. சின்னசாமி, ஆகாஷ் ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் இரா தமிழரசன் ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment