பாலியல் வன்முறை செய்த பா.ஜ.க. எம்.பி.க்கு பாதுகாப்பு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கைவிலங்கு இதுதான் பிஜேபி ஆட்சியா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 29, 2023

பாலியல் வன்முறை செய்த பா.ஜ.க. எம்.பி.க்கு பாதுகாப்பு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கைவிலங்கு இதுதான் பிஜேபி ஆட்சியா?

புதுடில்லி,மே 29 - பழைய நாடாளு மன்றக் கட்டடம் திறக்கப்பட்டு 96 ஆண்டுகள் கடந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்குஅடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவைப் புறக்கணித்துவிட்டு நேற்று (28.5.2023)  புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடியே திறந்து வைப்பதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் புதிய நாடாளு மன்ற திறப்பு விழாவைப் புறக்கணித்துள்ளன.

இதனிடையே, இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கை பாலியல் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்ய வேண்டும் என்று மல்யுத்த விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்து டில்லியின் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மல்யுத்த விளையாட்டு வீரர்கள் புதிய நாடாளுமன்றத்தின் திறப்புவிழாவன்று "மஹிளா மகாபஞ்சாயத்" என்ற பெயரில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். எனவே பாதுக்காப்பு பலப்படுத்தப்பட்டு டில்லி மெட்ரோவின் மத்திய செயலகம் மற்றும் உத்யோக் பவன் நிலையங்களிலுள்ள அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களையும் அதிகாரிகள் மூடினர்.

மல்யுத்த வீரர்களின் "மஹிளா மகாபஞ்சாயத்" போராட்டத்திற்கு அனுமதி இல்லாதபோதிலும்  இந்திய முன்னணி மல்யுத்த வீரர்கள் புதிதாக திறக்கப்பட்ட நாடாளுமன்ற கட்டடத்திற்கு வெளியே போராட்டம் நடத்த   முயன்றனர். அப்போது அங்கு இருந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மல்யுத்த வீரர்-வீராங்கனைகளை கைது செய்தனர். ஆனால் பாலியல் வன்முறை குற்றச் சாட்டுக்கு ஆளான பா.ஜ.க.  எம்.பி., கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. 


No comments:

Post a Comment