புதுடில்லி, மே 30 - பா.ஜனதா ஆட்சி நடக்கும் மத்திய பிரதேசத்தில் இன்னும் 4 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள் ளதைத் தொடர்ந்து டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நேற்று (29.5.2023) கூட்டம் நடந்தது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மேனாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோ பால், மேலிட பொறுப்பாளர் அகர்வால், மேனாள் முதல் அமைச்சர் கமல்நாத் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.
கூட்டம் முடிவடைந்த பிறகு, ராகுல்காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறிய தாவது:-
கருநாடகாவில் 136 தொகுதிகளில் வெற்றிப் பெறுவோம் என்று கணித்தோம். அது அப்ப டியே நடந்தது. அது போரல், மத்தியபிரதேசத் தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில், 150 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கணித்துள்ளோம்.
கர்நாடகாவில் தொடங்கிய காங்கிரசின் வெற்றி பயணம், மத்திய பிரதேசத்திலும் தொட ரும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment