காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் - ராகுல் காந்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 21, 2023

காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் - ராகுல் காந்தி

பெங்களூரு, மே 21- கருநாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. சித்தராமையா முதலமைச்சராக வும், துணை முதலமைச்சராக மாநில தலைவர் டி.கே.சிவகுமாரும் நேற்று (20.5.2023) பதவி ஏற்றனர். 

அவர்களைத் தொடர்ந்து அமைச்சர்களாக எம்.பி. பாட்டீல், டாக்டர் ஜி. பரமேஷ்வர், கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், சதீஷ் ஜாரகிஹோலி, மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே, ராமலிங்கரெட்டி, ஜமீர் அகமது ஆகியோர் அமைச்சர் களாக பதவி ஏற்றனர். பதவியேற்பு விழாவில் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி பேசிய தாவது:-

எங்களுக்கு ஆதரவு அளித்த அனைத்து தலைவர்களுக்கும், கருநாடக மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த அய்ந்து வருடங்களாக கருநாடக மக்கள் மிகவும் துயரத்தில் இருந் தனர். அது இப்போது முடிவுக்கு வந்துள்ளது. கருநாடகாவில் வெறுப்பு அரசியல் தோற்கடிக்கப் பட்டு அன்பு வெற்றி பெற்றுள்ளது. 

காங்கிரஸ் கட்சித் தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதி களை நிறைவேற்றுவோம். நாங் கள் 5 உத்தரவாதங்களை கொடுத் திருக்கிறோம். பொய்யான வாக் குறுதிகளை வழங்க மாட்டோம். சொல்வதைச் செய்கிறோம்.

நாங்கள் அறிவித்த 5 உத்தர வாதங்கள் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தப்போகிறது. ஜாதி மத பேத மின்றி அனைவரையும் ஒன்று போல நடத்தியதுதான் வெற்றிக்கு காரணம். ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். கிரக லட்சுமி திட்டத்தின்கீழ் குடும்ப தலைவி களுக்கு ரூ.2000 வழங்கப்படும். இந்த உத்தரவாதம் உள்ளிட்ட 5 உத்தரவாதங்கள் குறித்த அறிவிப்பு, கருநாடக அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு வெளியாகும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment