கிடங்கு
செங்கல்பட்டு மாவட்டத்தில் 50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க பரிந்துரைக்கப் பட்டுள்ளதாக உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்.
விருது
அனைத்துப் பிரிவுகளிலும் ஒட்டுமொத்தமாகச் சிறந்து விளங்கியதற்காக, சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்களுக்கு ஒன்றிய அரசின் சாகர் சிரஷ்தா சம்மான் விருது வழங்கப்பட்டுள்ளது.
கடக்கும்
வங்கக்கடலில் அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ள ‘மொக்கா' நாளை வங்கதேசம் - வடக்கு மியான்மர் இடையே கரையை கடக்கும், இதன் காரணமாக வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மய்யம் தகவல்.
மாறுதல்
அரசுப் பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு தொடர்பான திருத்தப்பட்ட கால அட்ட வணையை பள்ளிக்கல்வி துறை வெளியிட்டுள்ளது. கலந்தாய்வு மே 15 முதல் 26ஆம் தேதி வரை நடை பெறுகிறது.
மாற்றம்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் நிலையம், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், விக் கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்தச் செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய சம்பவம் தொடர்பாக அம்பாசமுத்திரம் உட்கோட்டத் துக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் 24 காவலர்களையும், மாவட்டத்தின் பிற காவல் நிலையங் களுக்கு இடமாற்றம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவு.
இணைய வழியில்...
இணைய வழியில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரும் வசதியை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று தொடங்கி வைத்தார். இந்த வசதி 24 மணி நேரம் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment