இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கரோனா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 30, 2023

இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கரோனா

டெல்லி, மே 30 இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 224 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக 500-க்கு கீழ் பதிவாகி வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 224 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,90,054லிருந்து 4,49,90,278ஆக உயர்ந்துள்ளது. இந் தியாவில் கரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியான நிலை யில் இதுவரை இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 5,31,866லிருந்து 5,31,867ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 429 பேர் குணமடைந்த நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,44,53,908ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,709லிருந்து 4,503ஆக குறைந்தது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,695 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 220,67,09,286 ஆக அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment