பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பை சேர்ந்தவர்கள் தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 22, 2023

பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பை சேர்ந்தவர்கள் தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்

சென்னை, மே 22- பிற்படுத்தப்பட் டோர், மிக பிற்படுத்தப்பட் டோர், சீர்மரபினர் வகுப்பை சேர்ந்தவர்கள் தொழில், வியா பாரம் செய்ய கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி தெரிவித்து உள்ளார்.

சென்னை மாவட்ட ஆட் சியர் அமிர்தஜோதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப் பிடப்பட்டுள்ளதாவது, பிற் படுத்தப்பட்டோர், மிகப்பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன் னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள் மற் றும் வியாபாரம் செய்ய பொது கால கடன், பெண்களுக்கான புதிய பொற்கால கடன், பெண்களுக்கான நுண்கடன், ஆண்களுக்கான நுண்கடன் மற்றும் கறவை மாடு கடன் போன்ற கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட் டோர், பொருளாதார மேம் பாட்டுக் கழகம் கடனுதவி வழங்கி வருகிறது.

அந்த வகையில், கடனுதவி பெற விண்ணப்பதாரர் பிற் படுத்தப்பட்டோர், மிக பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் இனத்தவராக இருத் தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும் பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். பொது கால கடன் திட்டம், தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படு கிறது. ஆண்டு வட்டிவிகிதம் 6% முதல் 8% வரை. பெண் களுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ் அதிக பட்சமாக ரூ.2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5%. நுண் கடன் வழங்கும் திட்டத் தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு அதிக பட்சமாக ரூ.1.25 லட்சம் வரை யும் குழு ஒன்றுக்கு அதிகபட் சமாக ரூ.15 லட்சம் வரையும் கடன் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 4%.

மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த் தியாகி இருக்க வேண்டும். திட்ட அலுவலரால் (மகளிர் திட்டம்) தரம் செய்யப்பட் டிருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள். நுண் கடன் வழங்கும் திட்டத் தின் கீழ் ஆண்கள் சுய உதவிக் குழு உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையும், ஒரு குழுவிற்கு அதிக பட்ச கடன் தொகை ரூ.15 லட்சம் வரையும் கடன் வழங் கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5% ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பால் உற்பத்தியாளர்கள் கூட் டுறவு சங்கங்களில் உறுப்பின ராக உள்ளவர்களுக்கு ஒரு கறவை மாட்டிற்கு ரூ.30,000 வீதம் 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சம் ரூ.60,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6%.

சென்னை மாவட்ட ஆட் சியர் அலுவலகத்தின் 2ஆவது மாடியில் செயல்படும் பிற்படுத் தப்பட்டோர் நல அலுவலகம் அல்லது கூட்டுறவுச் சங்கங்க ளின் மண்டல இணைப் பதி வாளர் அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட மத்திய மற்றும் நகர கூட்டுறவு வங்கி கிளைகளிலும் கடன் விண் ணப்பம் பெற்றுக் கொள்ள லாம். விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்பப் படிவங் களை பூர்த்தி செய்து ஜாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் வங்கி கோரும் ஆவண நகல்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவ லகம், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் ஒப்படைக்க வேண் டும்.

எனவே, மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த தனி நபர்கள் மற்றும் குழுக்கள் கடன் விண்ணப்பங் களைப் பெற்று உரிய ஆவணங் களுடன் சமர்ப்பித்து பயன் பெறலாம். 

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment