மறைவுற்ற இரா.கோவிந்தசாமிக்கு கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 10, 2023

மறைவுற்ற இரா.கோவிந்தசாமிக்கு கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை

செங்கற்பட்டு, ஏப். 10- முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர்-செங்கற்பட்டு இரா.கோவிந்தசாமி (வயது 98) அவர்கள் 8.4.2013 அன்று முற்பகல் 10.30 மணியளவில் மறைந்தார்.

காவல்துறையில் பணியாற்றிய காலந்தொட்டு இயக்க கொள்கையில் ஈடுபாடு கொண்டவர் ஓய்வுக்குப் பிறகும் செங்கற்பட்டு மாவட்டத்தில் சிறப்பாக கழக பணியாற்றியவர். கழகம் அறிவித்த போராட்டம், ஆர்ப்பாட்டம்,மறியல் என்று அனைத்து களத்திலும் முன் நின்று களப் பணியாற்றியவர். கடைசி மூச்சு அடங்கும் வரை கருஞ்சட்டை தொண்டராக வாழ்ந்து காட்டிய முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் மறைவு கழகத்திற்கு பேரிழப்பு. இரா.கோவிந்தசாமி அவர் கள் உடலுக்கு கழகக் கொடி போர்த்தப்பட்டிருந்தது.

தலைமைக் கழகத்தின் சார்பில் 8.4.2023 அன்று மாலை 5 மணியளவில் மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர் செல்வம் தலைமையில் சென்னை மண்டல திராவிடர் கழக செயலாளர் தே.செ.கோபால், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன்,தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ், செங்கற்பட்டு மாவட்டத் தலைவர் செங்கை சுந்தரம், மாவட்டச் செயலாளர் அ.செம்பியன், மாவட்ட அமைப் பாளர் பொன்.இராசேந்திரன், செங்கற்பட்டு நகர தலைவர் க.தனசேகரன், காஞ்சிபுரம் மாவட்ட இணைச் செயலாளர் ஆ.மோகன் ஆகியோர் மலர் மாலை வைத்து இறுதி மரி யாதை செலுத்தினர். இரா.கோவிந்தசாமி அவர்களின் மூத்த மகன் கோ.தமிழ்ச்செல்வன், இளைய மகன் கோ.இரவி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment