சென்னையில் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்குக்குச் சிலை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 20, 2023

சென்னையில் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்குக்குச் சிலை!

முதலமைச்சர் அறிவிப்புக்குத் தமிழர் தலைவர் பாராட்டு!

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களுக்குச் சென்னையில் சிலை நிறுவப்படும் என்று தமிழ் நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்கள் இன்று (20.4.2023) அறிவித்துள் ளதைப் பாராட்டி  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

சென்னையில் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களுக்கு முழு உருவச் சிலை அமைப்போம் என்று நமது முதலமைச்சர் இன்று (20.4.2023) சட்டப்பேரவையில் அறிவித்தது - ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பாகும்!

தமிழ்நாட்டை அவர் தனது தாயகமாகவே மதித்தவர்.

சமூகநீதிக்காகவே பத்தே மாதங்களில் பிரதமர் பதவியை இழந்தவர்; அதற்காக வருத்தப்படாமல், பெருமிதப்பட்டு, ‘‘பலமுறை பிரதமர் பதவியை இழக்கத் தயார்'' என்று மண்டலுக்கு எதிரான கமண்டலுக்குப் பதில் தந்தவர்!

முதல் முறையாக நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் படம் திறந்து வரலாறு படைத்தவர். முத்தமிழறிஞர் கலைஞருடனும், திராவிட இயக்கத்தவரிடமும், நம்மிடமும் தனி அன்பு காட்டிய மாமனிதர்!

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

20.4.2023

No comments:

Post a Comment