கழக மாநில பொதுக்குழுவை சிறப்பாக நடத்த ஈரோடு மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 7, 2023

கழக மாநில பொதுக்குழுவை சிறப்பாக நடத்த ஈரோடு மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

ஈரோடு,   ஏப்.  7- ஈரோடு மாவட்ட கழக செயல்வீரர்கள் கலந்துரையாடல் கூட்டம் பெரியார் மன்றத்தில் 25.3.2023 அன்று மாலை 5 மணிக்கு மாவட் டத் தலைவர் கு.சிற்றரசு, தலை மையில் நடந்தது. மண்டலத் தலை வர் இரா.நற் குணன், மாவட்டச் செயலாளர் மா.மணிமாறன், பேராசிரியர் ப.காளி முத்து, கோ.பாலகிருஷ்ணன், கோ.திருநாவுக் கரசு முன்னிலை வகித்தனர்.

மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு த‌.சண்முகம் தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்கள் தலைமை யில் ஏப்ரல் 29ஆம் தேதி ஈரோட்டில் நடைபெறும் மாநில பொதுக்குழு கூட் டம் அதனை தொடர்ந்து மாலை யில் நடைபெறும் பொதுக்குழு விளக்க பொதுக்கூட்டம் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்க ளுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி, ஆகிய வற்றை சிறப்பாக நடத்து வது, அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து விரிவாக உரையாற்றினார். 

கூட்ட முடிவில் மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம் அவர் களின் பிறந்த நாளை முன்னிட்டு தோழர்கள் கேக் வெட்டி!  அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந் தனர்.

கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் வீ.தேவராஜ், பொதுக்குழு உறுப்பினர் செ.பிரகாசன், ப.சத்திய மூர்த்தி, மாநகர செயலாளர் 

தே.காமராஜ், பாவானி ஒன்றிய தலைவர் அ.அசோக்குமார்,கி.பிரபு ஆகியோர் கலந்து கொண்ட னர். மாவட்ட இளை ஞரணி தலை வர் அஜ்சூரியா நன்றி கூறினார்.

No comments:

Post a Comment