Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட கடலோர நகரங்களுக்கு ஆபத்து?
March 09, 2023 • Viduthalai

பருவநிலை மாறுபாடு காரணமாக கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரிக்கை களை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் அடுத்த 100ஆம் ஆண்டுக்குள் அதாவது 2,100 ஆம் ஆண்டுக்குள் சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட கடலோர பெரு நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ஆய்வு எச்சரித்துள்ளது.

பருவ நிலை மாற்றம் உலகம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது.

அதிக அளவு மழை, வரலாறு காணாத வறட்சி, புயல் என உலகம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் பருவ நிலை மாறுபாடே முக்கிய காரணமாக சொல்லப்படு கிறது.

புவி வெப்பயமாதால், பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்வதாக நிபுணர்கள் எச்சரித்து வருகிறன்றனர். கடல் நீர் மட்டம் உயர்வது மனித குலத்திற்கும் மனிதன் வாழ்வியல் சூழலுக்கும் ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பதோடு, கடலோரம் உள்ள மிகப்பெரிய நகரங்களும் மூழ்கும் அபாயம் இருப்பதாக அடிக்கடி நிபுணர்கள் விடுக்கும் எச்சரிக்கையாக உள்ளது. இதனால் கார்பன் உமிழ்வை முடிந்த அளவுக்கு குறைத்து இந்த பூமிப்பந்தை எதிர்கால தலைமுறையினருக்காக நாம் பாதுகாத்து வைக்க வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

இந்த நிலையில், காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை சார்ந்த காலநிலை மாறுபாடு ஆகியவை பூமிக்கு மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும் என்று அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக ஆய்வுகளை செய்து வரும் விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அதில் கடல் நீர் மட்டம் உயர்வால் சென்னை, கொல்கத்தா உள்பட ஆசியாவின் மிகப்பெரிய நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வெப்ப நிலை உயர்வு காரணமாக கடல் நீர் விரிவடை வதோடு பனிப்பாறைகளும் உருகுகின்றன. இதனால், கடல் நீர் மட்டம் அதிகரிக்கிறது. கடல் நீர் மட்டம் உயர்வு பிராந்திய அளவில் மாறுபடுகிறது. இதனால், சில குறிப்பிட்ட இடங்களுக்கு அதிகமான நீர் சேரும். இதனால் கடற் கரையை ஒட்டியிருக்கும் நகரங்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கக் கூடும். குறிப்பாக ஆசியாவில் உள்ள 6 பெரு நகரங்கள் பாதிப்பை எதிர்கொள்ளலாம். இந்தியாவில் சென்னை, கொல்கத்தா ஆகிய இரண்டு நகரங்களும் இந்த ஆபத்தில் இருக்கின்றதாம்.

தாய்லாந்தில் பாங்காக், இந்தோனேசியாவில் மணிலா, மியான்மரில் யாங்கோன், வியட்நாமில் ஹோசி மின்சிட்டி ஆகிய நகரங்களும் இந்த அபாயத்தில் உள்ளன. பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் அடுத்த 100ஆம் ஆண்டுக்குள் அதாவது 2,100 ஆம் ஆண்டுக்குள் இந்த நகரங்கள் கடுமையாக பாதிக்கப் பட வய்ப்பு இருப்பதாகவும் ஆய்வுக்குழு கண்டறிந்துள்ளது.

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ''சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்!
March 23, 2023 • Viduthalai
Image
தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையாருக்கு கருஞ்சட்டையின் கடிதம்!
March 19, 2023 • Viduthalai
Image
அவாளுக்காக அவாளே போட்டுக்கொண்ட தலைப்பு....
March 21, 2023 • Viduthalai
Image
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் அடுக்கடுக்கான திட்டங்கள் அறிவிப்பு!
March 20, 2023 • Viduthalai
Image
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
March 22, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn