பாஜகவுக்கு எதிராக செயல்பட்டால் ரெய்டு தான் நடக்கும் - தேஜஸ்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 7, 2023

பாஜகவுக்கு எதிராக செயல்பட்டால் ரெய்டு தான் நடக்கும் - தேஜஸ்வி

பட்னா, மார்ச் 7- பா.ஜ.க.வுக்கு எதிராக செயல்பட்டால் ரெய்டு தான் நடக்கும் என்று பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி கூறியுள்ளார். லாலு பிரசாத் மனைவி ராப்ரி தேவியிடம் சி.பி.அய். விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இதுகுறித்து பீகாரின் துணை முதலமைச்சர் தேஜஸ்வி கூறுகையில், பாஜகவுடன் இருந்தால், நீங்கள் ராஜா ஹரிச்சந்திராதான். ஆனால், பாஜகவுக்கு எதிராக செயல்பட்டால் ரெய்டு நடக்கும். மராட்டியத்தில் சரத் பவாரின் மருமகன் அஜித் பவார் பாஜகவுக்குச் சென்றார். அவர் மீது அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்பட்டன. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முகுல் ராய், பாஜகவுக்கு வந்தபோது, அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்பட்டன. ஆனால், நீங்கள் பாஜகவின் முகத்திரையை வெளிக்கொண்டு வந்தால் ரெய்டுதான் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment