ஆதாருடன், பான் கார்டு இணைப்பு - ஒன்றிய அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 30, 2023

ஆதாருடன், பான் கார்டு இணைப்பு - ஒன்றிய அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு

புதுடில்லி, மார்ச் 30- பான்கார்டு மற்றும் ஆதார் கார்டு ஆகிய இரண்டையும் இணைப்பதற்கான அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு ஆகிய இரண்டையும் அனைவரும் இணைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கடந்தாண்டு மார்ச் 31ஆம் தேதி அதற்கு கடைசி நாளாக இருந்தது. இருப்பினும், நாட்டில் அப்போது நிலவிய கரோனா சூழல் காரணமாக இந்த அவகாசம் வரும் இந்தாண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப் பட்டது.

அவகாசத்திற்கு இன்னும் 3 நாட்களே இருந்த நிலையில் கூடுதல் அவகாசம் நீட்டிப்பு வழங்கப்படுமா என கேள்வி எழுந்தது. 

இந்த நிலையில் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு ஆகிய இரண்டையும் இணைப்பதற்கான அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள் ளது. ஜூன் 30 வரை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment