Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
ஹோலியா - பலியா?
March 09, 2023 • Viduthalai

ஹோலி கொண்டாட்டத்தின்போது குளத்தில் மூழ்கி புதுமண இணையர் உள்பட 4 பேர் பலியாகினர். 

மத்தியப் பிரதேச மாநிலம், ரட்டிலம் மாவட்டம், இசர்துனி கிராமத்தைச் சேர்ந்த 20 வயது புதுமணப்பெண், 'ஹோலி பண்டிகை' கொண்டாடிவிட்டு அங்குள்ள குளத்தில் தனது கணவருடன் (23) குளிக்கச் சென்றார். அவர்களுடன் பெண்ணின் தம்பி (13), தங்கையும் (10) சென்றனர். முதலில் அந்த இளம்பெண் குளத்தில் இறங்கிக் குளித்துள்ளார். 

அப்போது அவர் ஆழமான இடத்திற்குச் சென்றுவிட்டார். இதனால் அவர் நீரில் தத்தளித்தார். இதனைக் கண்ட அந்தப் பெண்ணின் தம்பி மற்றும் தங்கை இருவரும் அடுத்தடுத்து குளத்தில் குதித்து அக்காவைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால், நீச்சல் தெரியாததால் அவர்களும் உயிருக்குப் போராடினர். அந்தப் பெண்ணின் கணவரும், அவர்களைக் காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால், ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 

இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் குளத்தில் மூழ்கிப் பரிதாபமாக இறந்தனர். இறந்த இணையருக்கு 2 வாரங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வு குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குளத்தில் மூழ்கி புதுமண இணையர் உள்பட 4 பேர் பலியான நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

 ஹோலி என்ற வண்ணம் பூசிக் கொண்டாடும் விழாவின் போது 'பாங்' எனப்படும் 

கஞ்சா போன்ற இலையை இடித்து எடுக்கும் சாற்றை பாலில் கலந்து சிறுவர்- பெரியவர், ஆண்கள் - பெண்கள் என்றில்லாமல் அனைவருமே குடித்துப் போதையில் புரள்வார்கள். பெண்களுக்கு இந்தப் போதை தெளிய முழு நாள்கூட ஆகும். இந்தப் போதையோடு ஆற்றில், குளத்தில் இறங்கினால் குளிர்ந்த நீர் உடலில் பட்டால் மேலும் போதை ஏறும். இதனால் தண்ணீரில் மூழ்கி இறந்துவிடுவார்கள். ஹோலி கொண்டாட்டத்தின்போது சாக்கடை, குளம், ஏரியில் விழுந்து சாகும் செய்தி ஒவ்வொரு ஆண்டும் ஹோலிக்கு அடுத்த நாள் சங்கிலித் தொடராக வந்துகொண்டே இருக்கும்.

மதமும், கடவுளும் - பண்டிகைகளும் கற்பனைகள் என்றாலும், மக்களின் மூளையில் படிந்து கிடக்கும் முட்டாள்தனமான பக்தி, புத்தியை மட்டுமல்ல; மனித உயிரையும் பலி வாங்குகிறதே - இதைப்பற்றி யாருக்குக் கவலை?

பகுத்தறிவுக்  கொள்கையைப் பரப்புவோர்மீது பாய்ந்து குதறும் குள்ள மனிதர்கள் சிந்திப்பார்களா? 

-  மயிலாடன்


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
காரைக்குடி என்.ஆர்.சாமி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் கொள்கையுரை
March 27, 2023 • Viduthalai
Image
இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ''சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்!
March 23, 2023 • Viduthalai
Image
ஓடப்பராக இருக்கும் ஏழையப்பர், உதையப்பர் ஆக வேண்டியதில்லை! ஓட்டப்பராகிவிட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசம் வீழ்ந்துவிடும்!
March 27, 2023 • Viduthalai
Image
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
March 22, 2023 • Viduthalai
Image
தமிழ்நாட்டில் விளையாட்டு நகரத்திற்கு இரண்டு இடங்கள் தேர்வு
March 22, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn