Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
கடன் வழங்குவதில் வங்கிகள் பாரபட்சமா? உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி
March 18, 2023 • Viduthalai

மதுரை, மார்ச் 18- சாதாரண வாடிக்கையாளர்களுக்கு எந்த சலுகையும் வழங்குவதில்லை. ஆனால், கார்பரேட் நிறு வனங்களின் கடனில் பாதியை தள்ளுபடி செய்கிறார்கள் என்று வங்கிகள் மீது மதுரை உயர்நீதிமன்ற  நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர். அப்போது வீட்டுக்கடன் உள்ளிட்ட பல்வேறு வகை வங்கிக்கடன்கள் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வந்தன. கடன் தொகை நிலுவை குறித்து சம்பந்தப்பட்ட வர்களுக்கு வங்கிகள் சார்பில் தாக்கீது அனுப்பப்பட்டு உள்ளன. அதன் அடிப்படையில் நட வடிக்கை எடுப்பதற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் பல மனுக்களை தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இந்த மனுக்கள் விசாரித்தபோது, வங்கிகளுக்கு நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை சரமாரியாக எழுப்பினர். 

"கடன் வாங்கிவிட்டு முறையாக திருப்பிச்செலுத்தும் வாடிக்கையாளர்கள் மீண்டும் கடன் கேட்டால், வங்கிகள் கடன் கொடுப்பதில்லை. ஆனால் பல்வேறு மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு கடன் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கின்றன. பல நேரங்களில் இவர்கள் நியாயமாக செயல்படுவதில்லை" என்று நீதிபதிகள் அதிருப்தியும், வேதனையும் தெரிவித்தனர். மேலும் "கடன் தொகையை செலுத்த முடியாத நேரத்தில் சாதாரண வாடிக்கையாளர் களுக்கு எந்த சலுகையும் வழங்குவதில்லை. ஆனால் கார்பரேட் நிறுவனங்கள் பெற்ற கடன் தொகையில் பாதியை தள்ளுபடி செய்கிறார்கள்" என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்குகளின் விசார ணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
காரைக்குடி என்.ஆர்.சாமி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் கொள்கையுரை
March 27, 2023 • Viduthalai
Image
இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ''சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்!
March 23, 2023 • Viduthalai
Image
ஓடப்பராக இருக்கும் ஏழையப்பர், உதையப்பர் ஆக வேண்டியதில்லை! ஓட்டப்பராகிவிட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசம் வீழ்ந்துவிடும்!
March 27, 2023 • Viduthalai
Image
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
March 22, 2023 • Viduthalai
Image
தமிழ்நாட்டில் விளையாட்டு நகரத்திற்கு இரண்டு இடங்கள் தேர்வு
March 22, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn