புதிய எண்ணெய் வளம் கண்டுபிடிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 12, 2023

புதிய எண்ணெய் வளம் கண்டுபிடிப்பு

வின்தோக், மார்ச் 12- நமீபியாவின் அரசு எண்ணெய் நிறுவனமான நாம்கோர் மூன்றாவது புதிய எண்ணெய் வளத்தைக் கண்டுபிடித் திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்பிரிக்கக் கண்டத் தில் தென் பகுதியில் உள்ள நமீபியாவில் அண்மைக் காலத்தில் கண்டுபிடிக்கப் பட்டு வரும் எண்ணெய் வளம் அந்நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 

எண்ணெய் வளத்தைக் கண்டுபிடிக்கும் தொழில் நுட்பம் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த நமீபியா, சில வெளிநாட்டு நிறுவனங்களுடன் உடன்பாடு கண்டு, அந்தப் பணியில் இறங்கியது. ஏராளமான எண்ணெய் வளம் நமீபியக் கடற்பகுதிகளில் இருப்பதாகக் கண்டறியப் பட்டது. கிடைக்கப் போகும் வளங்கள் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் பலன் தரக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதற்காக அரசு எண்ணெய் நிறுவனமான நாம்கோர் இந்தப் பணியில் ஈடுபட்டது.

தொழில்நுட்ப உதவியை வெளிநாட்டு நிறுவனங் கள் மூலமாகப் பெற்றுக் கொண்டனர். ஏற்கெனவே இரண்டு இடங்களில் எண்ணெய் வளம் இருப்பதைக் கண்டறிந்த நாம்கோர் தற்போது மூன்றாவது பெரிய வளத்தைக் கண்டுபிடித்துள்ளது. இந்த எண்ணெய் வளத்தைப் பயன்படுத்துவதில் நாம்கோரின் பங்கு குறைவாக இருப்பதால், அதை உயர்த்து வதற்கான முயற்சியையும் செய்து வருகிறார்கள். 

இத்தகைய வளங்கள் நமீபியாவின் பொருளா தாரத்தை உயர்த்தும் என்றும், ஆப்பிரிக்காவில் மேலும் வளங்கள் இருப்பதைக் கண்டுபிடிப்பதற் கான முயற்சிகளையும் அதிகப்படுத்தும் என்றும் நாம்கோர் நிறுவனத்தின் நிர்வாகிகள் தெரிவிக் கிறார்கள்.

No comments:

Post a Comment