ஆளுநர் ரவியை கண்டித்து உதகையில் ஆளுநர் மாளிகை முற்றுகை கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 11, 2023

ஆளுநர் ரவியை கண்டித்து உதகையில் ஆளுநர் மாளிகை முற்றுகை கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது

உதகமண்டலம், மார்ச் 11- உதகை ஆளுநர் மாளிகை முன் கருப்புக் கொடி ஏந்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி, 5 நாட்கள் சுற்றுப் பயணமாக நீலகிரி மாவட்டத் திற்கு வந்துள்ளார். உதகையில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு அவர் சென்ற நிலையில், அங்கு வைத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். ஆன்லைன் ரம்மி விளையாட் டால் தமிழ்நாட்டில் நாற்பதிற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்தால் அப்பாவி மக்கள் உயிரிழப்பதை தடுக்கும் வகை யில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல மைச்சர் மு.க. ஸ்டாலின், அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்புடன் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை நிறைவேற்றினார்.  

இந்த மசோதா ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஆன் லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநர் ஆர்.என் ரவி கடந்த 6ஆம் தேதி தமிழ்நாடு அரசுக்குத் திருப்பி அனுப்பினார். சட்ட மசோதா நிறை வேற்றப்பட்டு 139 நாட்களைக் கடந்த நிலையில் மசோதாவை ஆளுநர் ஆர்.என் ரவி திருப்பி அனுப்பியது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசப்பை ஏற்படுத்தி உள்ளது.  மேலும் தமிழ்நாடு முழுவதும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. அரசியல் கட்சியினர் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இந்த பரபரப் பான சூழலில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் 9.3.2023 அன்று கூடியது.

இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கக் கோரிய மசோதாவைச் சட்டமன்றத்தில் இயற்றி மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்புவது தொடர்பாக முடிவு செய்யப்பட்டதாகத் தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார். இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, 5 நாட்கள் சுற்றுப்பயணமாக நீலகிரி மாவட்டத் திற்குச் சென்று உள்ளார்.  உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் தங்கி உள்ளார். ஆளுநரின் செயலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று சிபிஅய், சிபிஎம், விசிக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்து இருந்தன.

 உதகை ஆளுநர் மாளிகையில் தங்கி உள்ள ஆளுநர் ஆர்.என் ரவியை கண்டித்தும், உடனடியாக உதகையை விட்டு அவர் வெளியேற வலியுறுத்தியும் நேற்று (10.3.2023) உதகை ஆளுநர் மாளிகை முன் உள்ள அரசு தாவரவியல் பூங்கா நுழைவு வாயிலில் சிபிஅய் மற்றும் சிபிஎம் கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

ஆளுநருக்கு எதிராக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். 

இதனைத் தொடர்ந்து சிபிஅய்எம் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பத்ரி தலைமையில் ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அரசு களின் கட்டுப்பாட்டைத் தான் ஆளுநர் பின்பற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ள நிலை யில் அதனைத் தமிழ்நாட்டு ஆளுநர் மீறுகிறாரா என்றும், சமூக நீதி மற்றும் பொது நீதி சீர்திருத்தக் கருத்துக்களை எதிரானது என அரசியல் பேசுவதாக கூறி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களையும் தடுத்து நிறுத்திக் காவல் துறையினர் கைது செய்தனர்.  இதனால் அரசு தாவரவியல் பூங்கா நுழைவு வாயில் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது. தொடர் போராட் டங்களை தொடர்ந்து அரசு தாவர வியல் பூங்கா நுழைவு வாயிலில் பலத்த காவல் துறைப் பாதுகாப்பு போடப் பட்டது.

இதனால் கேரள மாநிலம் வைத்தேரிக்கு செல்வதாக இருந்த ஆளுநர் அரை மணி நேரத்திற்கு முன்பாகவே புறப்பட்டுச் சென்றார். 

No comments:

Post a Comment