கடலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கடலூரில் 31 3 2023 அன்று கழக பரப்புரை பயண நிறைவு விழா நிகழ்ச்சி மாநாடு போல் ஏற்பாடாகி வருகிறது. சுவர் எழுத்து விளம்பரங்கள், பதாகைகள், சுவரொட்டிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை தமிழ்நாடு அரசு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் அவர்களிடம் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மாவட்ட தலைவர் தண்டபாணி, மாவட்ட அமைப்பாளர் மணிவேல், கழகப் பேச்சாளர் புலவர் ராவணன், காட்டுமன்னார்குடி ஒன்றிய செயலாளர் ஆனந்த பாரதி ஆகியோர் 25.3.2023 அன்று காட்டுமன்னார்குடி முட்டத்தில் சந்தித்து நேரில் வழங்கினர். அண்மையில் தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையை சிறப்பாக தயாரித்து சட்டசபையில் நிறைவேற்றிய அமைச்சரின் சீரிய பணியை கழகத் தோழர்கள் பயனாடை போர்த்தி பாராட்டினர்.
Sunday, March 26, 2023
Home
கழகம்
ஈரோடு முதல் கடலூர் வரையிலான தொடர் பிரச்சாரப் பயண நிறைவு விழா கடலூரில் பணிகள் தீவிரம் - வேளாண்துறை அமைச்சருடன் சந்திப்பு
ஈரோடு முதல் கடலூர் வரையிலான தொடர் பிரச்சாரப் பயண நிறைவு விழா கடலூரில் பணிகள் தீவிரம் - வேளாண்துறை அமைச்சருடன் சந்திப்பு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment