நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி விதிமாற்றம் அநீதி : தொல். திருமாவளவன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 14, 2023

நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி விதிமாற்றம் அநீதி : தொல். திருமாவளவன்

புதுடில்லி, மார்ச் 14 நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒவ்வொரு ஆண்டும் 22.5% நிதியை தாழ்த்தப்பட்ட - பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளின் மேம் பாட்டுக்காக செலவிடவேண்டும் என்பது கட்டாயம் இல்லை என மாற்றப்பட்டுள்ளது. மோடி அரசின் இந்த அநீதியை வன்மை யாகக் கண்டிக்கிறோம்" என்று விசிக தலைவரும், மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நாடாளு மன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒவ்வொரு ஆண்டும் 22.5% நிதியை தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளின் மேம்பாட்டுக்காக செலவிடவேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. தற்போது அதனைக் கட்டாயம் இல்லை என மாற்றியுள்ளனர். மோடி அரசின் இந்த அநீதியை வன்மையாகக் கண்டிக்கிறோம்" என்று பதிவிட் டுள்ளார். முன்னதாக, 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக் கான உள்ளூர் மேம்பாட்டுத் திட் டத்தின் வழிகாட்டு நெறிமுறை களின்படி, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கான உள் கட்டமைப்பு மேம்பாட்டு பணி களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் மேம் பாட்டு நிதியிலிருந்து 15 சதவீதத்தை தாழ்த்தப்பட்டவர் மேம்பாட்டிற் கும், 7.5 சதவீதத்தை பழங்குடியினர் மேம்பாட்டிற்கு பயன்படுத்தலாம். அதாவது, நாடாளுமன்ற உறுப்பி னர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியான ரூ.5 கோடியில், ரூ.75 லட்சத்தை தாழ்த்தப்பட்ட மக் களுக்காகவும், ரூ.37.5 லட்சத்தை பழங்குடியினருக்காகவும் கட்டா யம் செலவிட வேண்டும் என்ற விதிமுறை குறிப்புகளை தனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்து பகிர்ந்துள்ளார்.


No comments:

Post a Comment