Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: தலைமைத் தேர்தல் ஆணையருடன் எதிர்க்கட்சி தலைவர்கள் சந்திப்பு
March 17, 2023 • Viduthalai

புதுடில்லி, மார்ச் 17- ஜம்மு--காஷ்மீர் யூனியன் பிர தேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தக் கோரி தேசிய மாநாடு கட்சியின் தலைவரும் மக் களவை உறுப்பினருமான ஃபரூக் அப்துல்லா தலை மையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையரை 16.3.2023 அன்று சந்தித் தனர்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி வழங்கி வந்த அரசமைப்புச் சட்டத் தின் பிரிவு-370 கடந்த 2019-இல் நீக்கப்பட்டதையடுத்து, ஜம்மு--காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இவற்றில் சட்டப் பேரவை கொண்ட யூனியன் பிரதேசமாக ஜம்மு-காஷ்மீர் இருக்கும் என அறிவிக்கப் பட்டது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் மேனாள் முத லமைச்சரும் நாடாளு மன்ற உறுப்பினருமான ஃபரூக் அப்துல்லா தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரைச் சந்தித்து, ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) தலைவர் சரத் பவார், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம்யெச்சூரி, ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கையெ ழுத்திட்ட அறிக்கை ஒன்றையும் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் அவர்கள் வழங்கினர்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதா வது: சட்டப்பேரவை தேர்தல் நடத்துவதில் காலதாமதம், ஜம்மு-காஷ்மீர் மக்களின் அடிப் படை மற்றும் ஜனநாயக உரிமைகளை மறுப்ப தோடு, அரசமைப்புச் சட்டத்தை மீறுவதுமாகும்.

இது குறித்து விவா திக்கும்போது, பஞ்சாயத்து அமைப்புகள் செயல்படுவதால், பேர வைத் தேர்தலை நடத்தும் தேவை இல்லையென்ற வாதம் முன்வைக்கப்படு கிறது. பஞ்சாயத்து உள் ளிட்ட அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடத் தப்படுவது, ஒருபோதும் சட்டப்பேரவை தேர்த லுக்கு மாற்றாக அமையாது.

சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த அரசு தயாராக இருப்பதாக ஒன்றிய உள்துறை அமைச் சர் உள்ளிட்டோர் பல முறை தெரிவித்துள்ளனர். இது குறித்து தேர்தல் ஆணையம்தான் தனது இறுதி முடிவை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்க ளைச் சந்தித்த மக்களவை உறுப்பினர் ஃபரூக் அப்துல்லா கூறுகையில், ‘ஜம்மு-காஷ்மீரில் சட்டப் பேரவையும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும் இல்லாத நிலை கடந்த 5 ஆண்டுகளாக நீடிக்கிறது. எங்கள் கோரிக்கை களைக் கேட்டறிந்த தலைமைத் தேர்தல் ஆணையர், விரைவில் இது குறித்தான கூட்டம் நடத்தப்படும் என உறுதியளித்தார். ஜம்மு-காஷ் மீரில் இயல்பு நிலை திரும்பி உள்ளதாக அரசு கூறுகிறது. தற்போது, சட் டப்பேரவை தேர்தல் நடத்துவதற்கான பொறுப்பு தேர்தல் ஆணையத்திடமே உள்ளது’ என்றார் அவர்.

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ''சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்!
March 23, 2023 • Viduthalai
Image
தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையாருக்கு கருஞ்சட்டையின் கடிதம்!
March 19, 2023 • Viduthalai
Image
அவாளுக்காக அவாளே போட்டுக்கொண்ட தலைப்பு....
March 21, 2023 • Viduthalai
Image
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் அடுக்கடுக்கான திட்டங்கள் அறிவிப்பு!
March 20, 2023 • Viduthalai
Image
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
March 22, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn