Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
பி.ஜே.பி. நிரந்தரமாக ஆட்சியில் நீடிக்க முடியாது லண்டனில் ராகுல் காந்தி கருத்து
March 08, 2023 • Viduthalai

லண்டன், மார்ச்  8- காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி இங்கி லாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரு கிறார். அந்த நாட்டின் நாடாளு மன்ற வளாகத்தில் நாடாளுமன்ற உறுப்பி னர்கள் மத்தியில் நேற்று முன்தினம் (6.3.2023) உரையாற்றினர். தொடர்ந்து சாத்தம் ஹவுஸ் என்ற பெயரில் அழைக்கப் படுகிற சிந்தனை யாளர் பேரவையிலும் அவர் உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் கூறியதாவது:-  இந்தியா விடுதலை அடைந்த காலகட் டத்தில் இருந்து தற்போது வரை காங்கிரஸ் கட்சிதான் பெரும்பாலான காலகட்டத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. பாஜ.க.வின் ஆட்சிக்கு முன் பாக நாங்கள்தான்  ஆட்சி நடத்தினோம். ஆனால், இந்தியாவில் நாம் ஆட்சி அதி காரத்துக்கு வந்து விட்டோம். நாம்தான் நிரந்தரமாக ஆட்சி செய்வோம் என்று பா.ஜ.க. நம்புகிறது. ஆனால் அது நடக் காது. இந்திய ஜனநாயகத்துக்கு தேவைப் படுகிற பழுதுபார்க்கிற பணியை எதிர்க்கட்சிகள் கூட்டாக மேற் கொள்ள முடியும். 

பெகாசஸ் மென்பொருள் 

காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்காலத் தில் நாங்கள் நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வந்தோம். ஆரம்பத்தில் நகர்ப்புறங்களைக் கவனிக்கத் தவறி விட்டோம். அது உண்மைதான். 

காங்கிரஸ் கட்சி தவிர்த்து அன்னிய ஊடகங்களும், இந்திய ஜனநாயகத்தில் தீவிரமான பிரச்சினைகள் இருப்பதை முக்கியத்துவம் கொடுத்து வெளியிடு கின்றன. எனது கைப்பேசியில் பெகா சஸ் உளவு மென்பொருள் இருந்தது. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது இது நடக்க வில்லை. 

ஆர்.எஸ்.எஸ். மீது சாடல் 

ஆர்.எஸ்.எஸ்.சை ஒரு ரகசிய சமூகம் என்று நீங்கள் அழைக்கலாம். அது முஸ்லிம் சகோதரத்துவத்தின் பாதை யில் கட்டமைக்கப்பட்டுள்ளது, மேலும் ஜனநாயகப் போட்டியைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வருவதும், ஆட்சிக்கு வந்த பின்னர் ஜனநாயகப் போட்டியைத் தகர்ப்பதுவும்தான் அவர்களது எண் ணம். ஆர்.எஸ்.எஸ்., ஓர் அடிப்படை வாத, பாசிச அமைப் பாக செயல்படு கிறது. அது நாட்டின் நிறுவனங்களைக் கைப்பற்றுவதன் மூலம் இந்தியாவில் ஜனநாயகப் போட்டியின் தன்மையை மாற்றி உள்ளது. பத்திரிகைத்துறை, நீதித் துறை, நாடாளுமன்றம், தேர்தல் கமிஷன் என அனைத்து ஜனநாயக அமைப்புகளும் அழுத்தத்தின்கீழ் உள்ளன. அச்சுறுத்தலின் கீழ் இருக் கின்றன. ஒரு வழியில் அல்லது பிற வழியில் கட்டுப்படுத்தப்படுகின்றன. 

சீனா 

உட்கார்ந்திருக்கிறது.... 

இந்தியாவின் 2000 ச.கி.மீ. பகுதியில் சீனா உட்கார்ந்து கொண்டு இருக்கிறது. ஆனால் எங்கள் பிரதமர் அங்கு சீன நாட்டினர் இல்லை என்கிறார். அமெரிக்கா உடனான இந்திய உறவை சீனா அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அருணாசல பிரதேசம் மற்றும் லடாக் கில் உள்ள படை வீரர்களின் பின்னணி யில் உள்ள அடிப்படை அம்சம், உக்ரைனில் நடந்ததைப் போன்றது தான். இதை நான் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் தெரிவித்தேன். அவர் நான் சொன்னதை ஒப்புக்கொள்ள வில்லை. இது ஒரு வேடிக்கையான யோசனை என அவர் நினைக்கிறார். 

இவ்வாறு அவர் கூ றினார். 

காங்கிரஸ் ஊடகப் பிரிவின் தலைவர் பவன் கெரா டுவிட்டரில் வெளியிட்ட பதிலடியில், "வேலை இல்லாமல் இருக்கிற ஆளும் கட்சியின் தலைவர் ஒருவர் மீண்டும் வேலை பெற முயற்சிக்கிறார். அதைக் கவனிப்பதைக் காட்டிலும் வேடிக்கை ஒன்றும் இல்லை. எதிர்க் கட்சித் தலை வர்களின் அறிக்கைகளைத் திரிப்பதில் முழு நேர வேலையாக இருப்பவர்கள், தங்களுக் குப் பிடித்தமான 'அப் கி பார், டிரம்ப் சர்க்கார்' என்று முழங்கிய முழக்கத்தை மறந்து விடுகிறார்கள்" என கூறி உள்ளார். 

இந்த  முழக்கம்,  பிரதமர் மோடி அமெரிக்கா சென்றபோது ஹூஸ்ட னில் பேசு 

கையில்,  அப் போதைய அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஆதர வாக கூறிய முழக் கம் ஆகும்.


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ''சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்!
March 23, 2023 • Viduthalai
Image
தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையாருக்கு கருஞ்சட்டையின் கடிதம்!
March 19, 2023 • Viduthalai
Image
அவாளுக்காக அவாளே போட்டுக்கொண்ட தலைப்பு....
March 21, 2023 • Viduthalai
Image
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் அடுக்கடுக்கான திட்டங்கள் அறிவிப்பு!
March 20, 2023 • Viduthalai
Image
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
March 22, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn