தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் அரசு நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்! 500க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 40,000 வேலைவாய்ப்புகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 15, 2023

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் அரசு நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்! 500க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 40,000 வேலைவாய்ப்புகள்!

தமிழ்நாடு முழுவதும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு வேலைவாய்ப்பு துறை இணைந்து தனியார் நிறுவனங்கள் மூலம் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தரும் முகாம்களை நடத்தி வருகின்றனர். இந்த முகமாம் களில் நூற்றுக் கணக்கான தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலையில்லா இளைஞர்களுக்கு ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பை உருவாக்கித் தருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக ஈரோடு, தஞ்சாவூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் வருகின்ற 16, 18, 19 ஆகிய தேதிகளில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடைபெற இருக்கிறது. கீழ்காணும் தகுதிகள் உள்ள இளைஞர்கள் இந்த முகாம்களில் தகுந்த சான்றிதல்களோடு பங்கு பெறலாம்.

தேவையான கல்வித்தகுதிகள்:

இம்முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் அய்.டி.அய். டிப்ளமோ, பி.இ. நர்சிங், பி.இ, பி.டெக் உள்ளிட்ட பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம் என அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. கலந்து கொள்ளும் நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

வேலைவாய்ப்பு முகாமிற்கு தேவையான சான்றிதழ்கள்

    முகாம் முன்பதிவு நகல்

    சுய விவர குறிப்பு

    கல்விச் சான்றிதழ்கள்

    ஆதார் கார்டு

வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடங்கள்!

ஈரோடு-நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெருந்துறை ரோடு, ஈரோடு மாவட்டம்.

திருவள்ளூர்-தர்மமூர்த்தி ராவ் பஹதூர் காலவள கண்ணன் செட்டி இந்து கல்லூரி, தர்மமூர்த்தி நகர், திருவள்ளூர்.

தஞ்சாவூர்-ஏனாதி இராஜப்பா கலை அறிவியல் கல்லூரி, ஏனாதி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் - 614615

திருவண்ணாமலை-அருணை பொறியியல் கல்லூரி, வேலுநகர், தென்மாத்தூர், திருவண்ணா மலை வட்டம்.

இராணிப்பேட்டை-பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாவல்பூர், ராணிப் பேட்டை.

ஈரோடு - 19.3.2023 - காலை 8மணி - மாலை 3மணி

திருவள்ளூர் - 18.3.2023 - காலை 9மணி - மாலை 3மணி

தஞ்சாவூர் - 18.3.2023 - காலை 8.30மணி - மாலை 3மணி

திருவண்ணாமலை - 16.3.2023 - காலை 8மணி - மாலை 3மணி

இராணிப்பேட்டை - 18.3.2023 - காலை 9மணி - மாலை 5மணி

முன்பதிவு செய்வது எப்படி?

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள முன்பதிவு செய்திருக்க வேண்டும்.

தனியார்துறை வேலைவாய்ப்பு இணைய தளத்தில் லாகின் செய்யவும். புதிய பயனராக இருந்தால் புது அய்டி கிரியேட் செய்யவும்.

டாஷ்போர்டில் Job Fair பட்டியல் இருக்கும். அதில் கிளிக் செய்யவும்.

உங்கள் ஊரின் முகாம் அறிவிப்பின் மீது கிளிக் செய்யவும்.

தற்போது, Apply என்ற பகுதியை கிளிக் செய்யவும்.

தற்போது உறுதிப்படுத்தல் மெயில் வரும்.

முன்பதிவு செய்த ஆவணங்களை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

No comments:

Post a Comment