இந்தியாவில் கரோனா பாதிப்பு 444 ஆக குறைந்தது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 14, 2023

இந்தியாவில் கரோனா பாதிப்பு 444 ஆக குறைந்தது

சென்னை, மார்ச் 14- கரோனா வுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிக ரித்து வருகிறது. 113 நாட்க ளுக்கு பிறகு 12.3.2023 அன்று 500-அய் தாண்டி யது. 

இந்தநிலையில், நேற்று (13.3.2023) காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், 444 பேருக்கு தொற்று உறுதி யானது. இதுவரை கரோ னாவால் பாதிக்கப்பட்ட வர்கள் மொத்த எண் ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 90 ஆயிரத்து 936 ஆக உயர்ந்தது. தொற் றில் இருந்து 24 மணி நேரத்தில் 252 பேர் குண மடைந்தனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 41 லட்சத்து 56 ஆயிரத்து 345 பேர் நோயில் இருந்து மீண்டுள்ளனர். கரோனா வுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று அதில் 191 அதிகரித் தது. மொத்தம் 3 ஆயிரத்து 809 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று முன் தினம் கரோனா உயிரி ழப்பு எதுவும் இல்லை. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஒருவர் பலியானார். அதனால் மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 782 ஆக உயர்ந்தது.


No comments:

Post a Comment