காசோலை மோசடி பா.ஜ.க. நிர்வாகிக்கு 2 ஆண்டு சிறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 18, 2023

காசோலை மோசடி பா.ஜ.க. நிர்வாகிக்கு 2 ஆண்டு சிறை

 தூத்துக்குடி, மார்ச் 18- தூத்துக்குடியில் காசோலை மோசடி வழக்கில் பா.ஜ மாநில பொருளாதார பிரிவு செயலாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.

தூத்துக்குடி பிரையண்ட் நகரை சேர்ந்தவர் பிரபு. தூத்துக்குடி மாநகராட்சி மேனாள் உறுப்பினரான இவர், பாஜக மாநில பொருளாதார பிரிவு செயலாளராக இருந்து வருகிறார். தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் பரமசிவன். பால் வியாபாரியான இவரும், பிரபுவும்  நண்பர்கள். இதனால் பிரபு கடந்த 12.10.2008 அன்று பரமசிவனிடம் இருந்து கடனாக ரூ.5 லட்சம் பெற்றுள்ளார். இதற்காக தலா ரூ.2.50 லட்சத்துக்கு 2 காசோலைகளை பிரபு கொடுத்துள்ளார். இந்த 2 காசோலைகளையும் பரமசிவன் 16.12.2008 அன்று பணம் பெறுவதற்காக  வங்கியில் கொடுத்துள்ளார். ஆனால், பிரபு கணக்கில் போதுமான பணம் இல்லாததால் இரு காசோலைகளும் திரும்பி வந்து விட்டன.

இதுதொடர்பாக பரமசிவன், பிரபுவிடம் தகவல் தெரிவித்து தனது பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால், குறித்த காலத்தில் பணத்தை திருப்பி கொடுக்க பிரபு தவறிவிட்டார். இதையடுத்து பரமசிவன் கடந்த 11.05.2009 அன்று காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி ஜலதி, விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட பிரபுவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் மனுதாரரான பரமசிவனுக்கு ரூ.10 லட்சத்தை இழப்பீடாக ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும், தவறும் பட்சத்தில் மேலும் 2 மாதங்கள் சிறை தண்டனையை பிரபு அனுப விக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment