Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
காசோலை மோசடி பா.ஜ.க. நிர்வாகிக்கு 2 ஆண்டு சிறை
March 18, 2023 • Viduthalai

 தூத்துக்குடி, மார்ச் 18- தூத்துக்குடியில் காசோலை மோசடி வழக்கில் பா.ஜ மாநில பொருளாதார பிரிவு செயலாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.

தூத்துக்குடி பிரையண்ட் நகரை சேர்ந்தவர் பிரபு. தூத்துக்குடி மாநகராட்சி மேனாள் உறுப்பினரான இவர், பாஜக மாநில பொருளாதார பிரிவு செயலாளராக இருந்து வருகிறார். தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் பரமசிவன். பால் வியாபாரியான இவரும், பிரபுவும்  நண்பர்கள். இதனால் பிரபு கடந்த 12.10.2008 அன்று பரமசிவனிடம் இருந்து கடனாக ரூ.5 லட்சம் பெற்றுள்ளார். இதற்காக தலா ரூ.2.50 லட்சத்துக்கு 2 காசோலைகளை பிரபு கொடுத்துள்ளார். இந்த 2 காசோலைகளையும் பரமசிவன் 16.12.2008 அன்று பணம் பெறுவதற்காக  வங்கியில் கொடுத்துள்ளார். ஆனால், பிரபு கணக்கில் போதுமான பணம் இல்லாததால் இரு காசோலைகளும் திரும்பி வந்து விட்டன.

இதுதொடர்பாக பரமசிவன், பிரபுவிடம் தகவல் தெரிவித்து தனது பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால், குறித்த காலத்தில் பணத்தை திருப்பி கொடுக்க பிரபு தவறிவிட்டார். இதையடுத்து பரமசிவன் கடந்த 11.05.2009 அன்று காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி ஜலதி, விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட பிரபுவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் மனுதாரரான பரமசிவனுக்கு ரூ.10 லட்சத்தை இழப்பீடாக ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும், தவறும் பட்சத்தில் மேலும் 2 மாதங்கள் சிறை தண்டனையை பிரபு அனுப விக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
காரைக்குடி என்.ஆர்.சாமி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் கொள்கையுரை
March 27, 2023 • Viduthalai
Image
இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ''சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்!
March 23, 2023 • Viduthalai
Image
ஓடப்பராக இருக்கும் ஏழையப்பர், உதையப்பர் ஆக வேண்டியதில்லை! ஓட்டப்பராகிவிட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசம் வீழ்ந்துவிடும்!
March 27, 2023 • Viduthalai
Image
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
March 22, 2023 • Viduthalai
Image
தமிழ்நாட்டில் விளையாட்டு நகரத்திற்கு இரண்டு இடங்கள் தேர்வு
March 22, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn