அரசுக் கல்லூரிகளிசென்னை, மார்ச் 21- அரசுக் கல்லூரிகளில் ரூ.1,000 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 21, 2023

அரசுக் கல்லூரிகளிசென்னை, மார்ச் 21- அரசுக் கல்லூரிகளில் ரூ.1,000 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்



அரசுக் கல்லூரிகளிசென்னை, மார்ச் 21- அரசுக் கல்லூரிகளில் ரூ.1,000 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட இருப்பதாகவும் அய்ஏஎஸ் தேர்வுக்கு தயாராகும் 1,000 மாணவர் களுக்கு மாதம் ரூ.7,500 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் அரசுக் கல்லூரிகளில் ரூ.1,000 கோடி செலவில் உள்கட்டமைப்பு வசதிகள் 5 ஆண்டுகளில் மேம்படுத்தப்பட உள்ளன.

நடப்பு ஆண்டில் 25 பாலிடெக்னிக் கல்லூரிகள், 55 கலை, அறிவியல் கல்லூரிகளில் புதிய வகுப்பறைகள் கட்டுதல், ஆய்வகங்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இப்பணிகள் வரும் நிதி ஆண்டிலும் ரூ.200 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். மொத்தமாக, நிதிநிலை அறிக்கையில் உயர்கல்வித் துறைக்கு ரூ.6,967 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக ஒன்றிய அரசின் குடிமைப் பணிகள் தேர்வில் (அய்ஏஎஸ், அய்பிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வு) தமிழ்நாட்டில் இருந்து தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இப்போக்கை மாற்றியமைக்க சிவில் சர்வீஸ் தேர்வெழுதும் மாணவர் களுக்கு மேம்பட்ட பயிற்சி அளிக்கும் திட்டத்தை அண்ணா நிர்வாகப் பணி யாளர் கல்லூரியுடன் இணைந்து தமிழ் நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் செயல் படுத்தும்.ஆண்டுதோறும் மதிப்பீட்டுத் தேர்வு மூலம் 1,000 மாணவர்கள் தேர்வுசெய்யப்படுவர்.

அவர்கள் முதல்நிலைத்தேர்வுக்கு தயாராவதற்கு மாதம் ரூ.7,500 வீதம் 10 மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப் படும். முதல்நிலைத்தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படும். இந்த திட்டத் துக்காக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துக்கு நிதிநிலை அறிக்கையில் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு - கருணைத் தொகை 

ரூ.40 லட்சமாக உயர்வு:

உயிர்த் தியாகம் செய்த, தமிழ் நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசால் வழங்கப்படும் கருணைத் தொகை ரூ.20 லட்சத்திலிருந்து இரு மடங்காக உயர்த்தி ரூ.40 லட்சமாக வழங்கப்படும். வீரதீரச் செயல்களுக்கான உயர் விருது களைப் பெறும் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையும் 4 மடங்காக உயர்த்தி வழங் கப்படும். இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகிறோம்.

இந்த கோரிக்கை நிறைவேறும் வரையில், பாதுகாப்பான, தரமான தங்குமிடங்களை வழங்கும் நோக்கத் துடன் மறுவாழ்வு முகாம்களில் 7,469 புதிய வீடுகள் கட்டப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. முதல்கட்டமாக 3,510 வீடுகளுக்கான பணிகள் ரூ.176 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.

இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 3,959 வீடுகளைக் கட்ட வரும் நிதி யாண்டில் ரூ.223 கோடியை தமிழ்நாடு அரசு வழங்கும். சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கு ரூ.5,346 கோடி ஒதுக்கீடு:

முதலமைச்சரின் முகவரி திட்டத்தில் இந்தாண்டு பெறப்பட்ட 17.7 லட்சம் மனுக்களில், 17.3 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும், கள ஆய்வில் முதல்வர் என்ற புதிய திட்டத் தில், பல்வேறு மாவட்டங்களுக்கு முதலமைச்சர் நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொள்கிறார். இதன் அடுத்த கட்டமாக அரசின் திட்டங் களையும் சேவைகளையும் கடைக் கோடி மக்களும் பெற்றுப் பயனடையும் வகையில் அனைத்து ஊராட்சிகளிலும், நகர்ப்புறப் பகுதிகளிலும் ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.ல் ரூ.1,000 கோடியில் உள்கட்டமைப்பு வசதி - உயர்கல்வித் துறைக்கு ரூ.6,967 கோடி ஒதுக்கீடு

No comments:

Post a Comment