1 முதல் 9-ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு நடத்தும் திட்டம் இல்லை : அமைச்சர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 17, 2023

1 முதல் 9-ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு நடத்தும் திட்டம் இல்லை : அமைச்சர் தகவல்

சென்னை மார்ச் 17  தமிழ்நாட்டில்  1 முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முன் கூட்டியே தேர்வு நடத் தும் திட்டம் இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் தற் போது, பிளஸ் 2, பிளஸ் 1 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. பத்தாம் வகுப்பு மாணவர் களுக்கு ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கி 20 தேதி முடிவடைய உள்ளது. இது முடிந்த பின்னர் 9ஆ-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறும். இதன்படி ஏப்ரல் 24 முதல் இந்தத் தேர்வுகள் தொடங்கி நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், வைரஸ் காய்ச்சல் பாதிப்பு காரணமாக 9ஆ-ம் வகுப்பு வரையிலான தேர்வுகளை ஏப்ரல் 17-ஆம் தேதி தொடங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து விளக்கம் அளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், "1ஆ-ம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்தும் திட்டம் இல்லை. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதியிலேயே தேர்வுகள் நடைபெறும்" என்று தெரிவித்தார்.


No comments:

Post a Comment