Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
ஓரவஞ்சனை
February 12, 2023 • Viduthalai

மகாராட்டிரா, குஜராத், அரியானா, புதுச் சேரி உள்ளிட்ட பல மாநிலங்களில் நடந்த ஜி 20 மாநாடுகளில் அந்த அந்த மாநில முதலமைச்சர்கள் மற்றும் பிரதமரின் படத்தைப் போட்டு விளம் பரப்படுத்தினார்கள். 

இந்த நிலையில் தமிழ்நாட்டில் நடந்த ஜி 20 மாநாட்டில் தமிழ் நாடு அரசு சின்னம், தமிழ்நாடு முதலமைச்சர் படம் எங்கும் இல்லை.  நாளிதழ்களிலும் விளம்ப ரம் தரப்படவில்லை.  தமிழ்நாடு அரசு முழுமையாக முயற்சி செய்து நடத்திய உலக சதுரங்கப் போட்டிகளின் விளம்பரங்களில் மோடி படத்தை ஸ்டிக்கர் போட்டு ஒட்டிய சங்கிகளின் செயல்பாடுகள் அனை வரும் அறிந்ததே.  

இது தொடர்பாக சமூகவலைதளங்களில் பெரும் விவாதங்களைக் கிளப்பிய நிலையில் திமுக தலைமை, தொண்டர்களை அமைதிப்படுத்தியது.  தமிழ்நாடு முதலமைச்சரின் பெயரை உச்சரிக்காமல், அவரின் உழைப்பை பெருமைப்படுத்தாமல் தமிழ்நாட்டில் எந்த நிகழ்வும் நடத்த முடியாது என்பதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக   ஜி 20 மாநாட்டில் தமிழ்நாட்டு முதலமைச்சரின் 'நான் முதல்வன்' தலைசிறந்த கல்வித்திட்டமாக அங்கீ கரிக்கப்பட்டு அந்த திட்டத்தை நாடு முழுவதும் கொண்டு செல்ல ஒன்றிய கல்வித்துறை செயலாளர் ஆணையிட்டுள்ளார். 

இதன் மூலம் இங் குள்ள பாஜகவினர் முதலமைச்சர் படத்தை பயன்படுத்தாவிட்டாலும் தமிழ்நாட்டில் நடக்கும் எந்த நிகழ்ச்சியிலும் முத லமைச்சரின் திட்டங்கள் ஒன்றிய அரசாலும் பெருமைப் பட பாராட்டும் திட்டமாக அமைந்துள்ளது.   பூனை கண்ணைமூடிக் கொண்டால் உலகம் இருண்டுவிடும் என்ற பாஜகவினரின் நினைப்பில் ஒன்றிய அரசின் கல்வி அமைச்சரகமே மண் ணைப் போட்டுவிட்டது.

தமிழ்நாடு என்றாலே ஓரவரஞ்சனைக் கண்ணா டியைப் போட்டுக்கொண்டு பார்க்கும் சிறுமைக்குணம் 140 கோடி மக்கள் திர ளைக் கொண்ட ஒரு துணைக் கண்டத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு இருப் பது அழகல்ல. 

எதற்கெடுத்தாலும் ஒன்றிய செயல்பாடுகளை தமிழ்நாடு எதிர்க்கிறதே என்று பொத்தாம் பொது வில் சங்கிகள் பேசுவ துண்டு.

அந்த சங்கிகள் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? மற்ற மற்ற மாநிலங்களில் ஜி-20 மாநாடுகளில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் சின்னம், முத லமைச்சர்களின் படங்கள் இடம்பெற்றிருக்கும்போது, தமிழ்நாட்டில் நடந்த ஜி-20 மாநாட்டில் மட்டும் அவை  இடம்பெறாதது ஏன்? ஏன்? 

 -  மயிலாடன்


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
காரைக்குடி என்.ஆர்.சாமி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் கொள்கையுரை
March 27, 2023 • Viduthalai
Image
இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ''சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்!
March 23, 2023 • Viduthalai
Image
ஓடப்பராக இருக்கும் ஏழையப்பர், உதையப்பர் ஆக வேண்டியதில்லை! ஓட்டப்பராகிவிட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசம் வீழ்ந்துவிடும்!
March 27, 2023 • Viduthalai
Image
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
March 22, 2023 • Viduthalai
Image
தமிழ்நாட்டில் விளையாட்டு நகரத்திற்கு இரண்டு இடங்கள் தேர்வு
March 22, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn