'டுவிட்டரில்' அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் கழகத் தலைவருக்கு நன்றி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 4, 2023

'டுவிட்டரில்' அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் கழகத் தலைவருக்கு நன்றி!

''தமிழ்நாடு'' பெயர் பிரச்சினை குறித்து 'இந்து' ஏட்டின் ஆசிரியர் மாலினி பார்த்தசாரதி தெரிவித்த தவறான கருத்துக்குத் தமிழ்நாடு நிதியமைச்சர் மாண்புமிகு பிடிஆர் பழனிவேல்ராஜன் அவர்கள் சரியாக பதிலடி கொடுத்து வருகிறார். அதனைப் பாராட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 'விடுதலை'யில் (2.2.2023) அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதற்கு நன்றி தெரிவித்து அமைச்சர் கழகத் தலைவருக்கு 'டுவிட்டரில்' பதிவு செய்துள்ளார்.

அதன் விவரம் வருமாறு:

தந்தை பெரியார் வழியில் திராவிடக் கொள்கைகளை தமது 90 ஆம் வயதிலும் அயராது உலகெங்கும் பறைசாற்றி வரும் தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 'விடுதலை' இதழில் அறிக்கை எழுதி, எனக்கு ஆதரவு அளித்தமைக்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த டுவிட்டர் பதிவில் நிதியமைச்சர் மாண்புமிகு பிடிஆர் பழனிவேல்ராஜன் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment