சமூக நீதி கண்காணிப்புக் குழு அண்ணா பல்கலை.யில் ஆய்வு.. - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 6, 2023

சமூக நீதி கண்காணிப்புக் குழு அண்ணா பல்கலை.யில் ஆய்வு..

தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட சமூக நீதி கண்காணிப்புக் குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் 

கோ.கருணாநிதி மற்றும் சுவாமிநாதன் தேவதாஸ் ஆகியோர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பல்கலைக்கழகத்தில் மேற் கொள்ளப்பட்ட மாணவர் சேர்க்கை, பேராசிரியர்கள் நியமனம் ஆகிய வற்றில் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக  துணைவேந்தர், பதிவாளர் மற்றும் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.  செய்தியாளர்களை சந்தித்த, சமூக நீதி கண்காணிப்பு குழு உறுப்பினர் சுவாமி நாதன் தேவதாஸ் அண்ணா பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தொடர்பான அறிக்கை  அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்றார்.


No comments:

Post a Comment