மதுரவாயல் - துறைமுகம் ஈரடுக்கு பாலத்திற்கு சுற்றுச்சூழல் நிபுணர் குழு ஒப்புதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 4, 2023

மதுரவாயல் - துறைமுகம் ஈரடுக்கு பாலத்திற்கு சுற்றுச்சூழல் நிபுணர் குழு ஒப்புதல்

புதுடில்லி,பிப்.4- மதுரவாயல் - துறைமுகம் ஈரடுக்கு உயர் மட்ட பாலம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் குழு ஒப்புதல் வழங்கி உள்ளது. சுமார் 5,800 கோடி ரூபாய் செலவில் இந்த பாலம் கட்டப்பட உள்ளது.

நீரோட்டத்திற்கு தடை ஏற்படக்கூடாது. பாலம் அமைக்க தற்காலிகமாக அமைக்கப்படும் கட்டமைப்புகள் பணிகள் முடிந்த ஒரு மாதத்திற்குள் அகற்றப்பட வேண்டும். கட்டுமா னத்தின் போது அகற்றப்படும் கழிவுகளை நீர் நிலையிலோ அல்லது அதற்கு அருகிலோ கொட்டக்கூடாது என்ற நிபந்த னைகளுடன் பாலம் கட்டும் திட்டத்திற்கு அனுமதி கிடைத் துள்ளது.


No comments:

Post a Comment