நீதிபதிகள் நியமனம் ஒன்றிய அரசின் போக்குக்கு நாரிமன் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 30, 2023

நீதிபதிகள் நியமனம் ஒன்றிய அரசின் போக்குக்கு நாரிமன் கண்டனம்

மும்பை, ஜன. 30- உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் கொலீஜியம் பரிந்துரை செய்த பெயர்களை கிடப்பில் போட்டால் அது ஜனநாயகத்துக்கு எதிரான கொடிய செயல் என்று மேனாள் நீதிபதி நாரிமன் சாடினார். 

உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்ற கொலீஜியத்துக் கும், ஒன்றிய அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. உச்சநீதிமன்றம் கொலீஜியம் முறை மீது மத்திய சட்ட ஒன்றிய கிரண் ரிஜிஜூ கடுமையாக விமர் சித்து வருகிறார். குறிப்பாக நீதிபதி கள் நியமனத்தில் கொலீஜியம் வெளிப்படையானது அல்ல என்று சாடி வருகிறார். 

இதே போன்று குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் விழா ஒன்றில் பேசுகையில், தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட் டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய் தது, நாடாளுமன்ற இறையாண் மையில் பாதிப்பை ஏற்படுத்தியது என கருத்து தெரிவித்தார். 

 இந்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்கிற வகையில், மும்பை பல் கலைக்கழகத்தில் நடந்த உச்சநீதி மன்ற மேனாள் தலைமை நீதிபதி எம்.சி.சாக்ளா நினைவு சொற் பொழிவு நிகழ்ச்சியில் உச்சநீதி மன்ற மேனாள் நீதிபதி ரோகிண் டன் பாலி நாரிமன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-  

கொலீஜியத்தின் செயல்முறை தொடர்பாக சட்ட மந்திரி வசை மாரி பொழிந்ததை கேட்டோம். சட்ட அமைச்சர் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியது அரசியல் சாசன அடிப்படை அம்சங்களில் உண்டு என்று நான் உறுதியாகச் சொல்வேன்.

அமெரிக்காவைப் போல் அல் லாமல், குறைந்தபட்சம் 5 நீதிபதி கள், அரசியல் சாசனத்தின் பிரிவு 145 (3) விளக்கத்தின்படி நம்பப் படுகின்றனர். அமெரிக்காவில் இதற்கு இணையாக எதுவும் இல்லை. 

எனவே அரசியல் சாசன அமர்வு என்று அழைக்கப்படுகிற குறைந்தபட்சம் 5 நீதிபதிகள், அரசமைப்பினை விளக்குவதற்கு நம்பப்படுகின்றனர். ஒருமுறை அந்த 5 அல்லது அதற்கு கூடுதலான நீதிபதிகள் அரசியல் சாசனத்தை விளக்கிவிட்டால், அரசியல் சாச னம் பிரிவு 144-இன்படி, நீங்கள் அந்த தீர்ப்பை பின்பற்றுவது உங் கள் கடமை ஆகும். 

இப்போது நீங்கள் அதை விமர் சனம் செய்யலாம். ஒரு குடிமகனாக நானும் விமர்சிக்கலாம். அதில் பிரச்சினை இல்லை. ஆனால் என் னைப் போல அல்லாமல், நீங்கள் அதிகாரம் பெற்ற பொறுப்பில் இருக்கிறீர்கள். நான் ஒரு குடி மகன்தான். அந்த தீர்ப்பு, சரியோ தவறோ அதிகாரம் பெற்ற பொறுப் பில் உள்ளவர் என்ற வகையில் நீங்கள் அதற்கு கட்டுப்பட்டவர். இதை ஒருபோதும் மறந்து விடா தீர்கள். 

அடிப்படை கோட்பாட்டின் கட்டமைப்பைப் பற்றிய பிரச் சினை, கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு 2 முறை நடந்திருக்கிறதே தவிர, அதன்பிறகு சமீபகாலமாக, இப்போது நடந்துள்ளதைத் தவிர யாரும் அதற்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. 

அமெரிக்காவைப் பொறுத்த மட்டில் நீதித்துறை நியமனங்களில் நீதித்துறை முடிவு எடுக்கும் செயல் முறை இல்லை. ஆனால் இந்தியா மாறுபட்ட அணுகுமுறையைக் கொண்டுள்ளது. 

நல்வாய்ப்பாக நமக்கு, 1990-கள் வரையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்து நீதிபதிகளை குடியரசுத் தலைவர் நியமித்தார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்ன சொன்னாரோ அல்லது பரிந்துரைத்தாரோ அது பின்பற்றப்பட்டது. ஒருவரை நீதி பதியாக நியமிக்கலாமா அல்லது வேண்டாமா என்பது உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியை விட வேறு யாருக்கு தெரியும்? 

அதன் பின்னர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தவிர்த்து மூத்த நீதிபதிகளும் ஆலோசிக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப் பட்டது. இறுதியில் நீதிபதிகள் நிய மன செயல்முறையை நீதித்துறை கையில் எடுத்துக்கொண்டது. 

சுதந்திரமான நீதித்துறையின் கடைசி கோடும் வீழ்ந்தால், நாடு புதிய இருண்ட யுகத்தின் படுகுழி யில் தள்ளப்பட்டு விடும். சுதந்திர மான மற்றும் அச்சமற்ற நீதிபதிகள் நியமிக்கப்படாவிட்டால் நீதித் துறை யின் சுதந்திரம் என்னவாகும்? பிரபல கார்டூனிஸ்டு ஆர்.கே.லட்சு மணனின் சாமானிய மனிதர், உப்பு அதன் சுவையை இழந்துவிட்டால், எதைப் போட்டு அதை சுவையாக் குவது என தனக்குத்தானே ஒரே ஒரு கேள்வியைக் கேட்டுக் கொள் வார். 

 5 நீதிபதிகளைக் கொண்ட சிறப்பு அமர்வு ஒன்று அமைக்கப் பட வேண்டும். கொலீஜியம் நீதி பதிகள் நியமனத்தில் ஒரு பெயரை அரசுக்கு அனுப்பி, 30 நாட்களுக் குள் எதுவும் சொல்லவில்லை என்றால், அதனிடம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என தீர்ப்பு வழங்க வேண்டும், உச்சநீதி மன்ற கொலீஜியம் பரிந்துரை செய்த பெயர்களை கிடப்பில் போட்டுவிட்டால், அது நாட்டின் ஜனநாயகத்துக்கு எதிரான மிகவும் கொடிய செயலாகும். ஏனென்றால், நீங்கள் ஒரு குறிப்பிட்ட கொலீஜி யத்துக்காக காத்திருந்து, அடுத்த கொலீஜியம் தனது மனதை மாற்றும் என்று நம்பிக்கொண்டு இருக்கிறீர்கள். நியாயமான காலத்திற்குள் நீதிபதிகள் நியமனம் செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment