நீட்டை எதிர்த்து நாடாளுமன்றத்தில் வலிமையான குரல் எழுப்புக! - நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 30, 2023

நீட்டை எதிர்த்து நாடாளுமன்றத்தில் வலிமையான குரல் எழுப்புக! - நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை, ஜன. 30 - முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (29.01.2023), சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் நடைபெற்ற தி.மு.க. மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் “பி.பி.சி. ஆவணப் பட சர்ச்சை மற்றும் ‘நீட்' விலக்கு உள்ளிட்ட ஒன்றிய அரசுக்கு எழுதப்பட்ட கடிதங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் உறுதியான விவாதங்களை எடுத்து வைக்க வேண்டும்” என்று அறிவு றுத்தினார்.

நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள்! 

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள ஒன்றிய அரசின் 2023-2024 நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் மற்றும் குடியரசுத் தலைவர் உரை குறித்து விவாதிக்கப்பட்டது.

தி.மு.க. சார்பில் எடுத்து வைக்கப்பட வேண்டிய முக்கியப் பிரச்சினைகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்தும் அகில இந்திய அளவில் முக்கியத் துவம் பெற்றுள்ள 2002ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் வன்முறை குறித்து 'பி.பி.சி.' வெளியிட்ட ஆவணப் பட சர்ச்சை, இந்திய பங்குச் சந்தையில் அதானி குழுமத்தால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து வெளிவந்துள்ள அறிக்கை மற்றும் இந்திய அரசமைப்பின் அடிப்படை பண்புகளை மாற்றி அமைக்கும் முயற்சியாக, குடியரசு துணைத் தலைவர் உள்ளிட்ட சிலர் தெரிவிக்கும் தேவையற்ற கருத்துகள் குறித்தும், நாடாளுமன்றத்தில் உறுதியான விவாதங்களை எடுத்து வைத்திட, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவு றுத்தியுள்ளார்.

ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு எழுதியுள்ள கடிதங்கள்!

அதேபோன்று, தமிழ்நாடு அர சால், ஒன்றிய அரசுக்கு எழுதப்பட் டுள்ள கடிதங்களின் நிலை குறித் தும் முக்கியமாக

• 'நீட்' தேர்வுக்கு விலக்களிக்கும் மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவது;

• தமிழ்நாடு மீனவர்கள்மீது இலங்கை அரசு தாக்குதல் நடத்துவது, கைது செய்வது, படகுகளை இலங்கை ராணுவம் பறிமுதல் செய்து நாட்டுடைமை ஆக்குவது;

• சிறுபான்மையின மாணவர்களுக்கு 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை வழங்கி வந்த மெட்ரிக் கல்வி உத வித் தொகையை நிறுத்தியது;

• மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிப்பது;

• மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது;

• சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவது;

• கால்நடைகளை நோயிலி ருந்து தடுக்கும் கோமாரி தடுப்பூசி களைப் பெறுவது; 

அகில இந்திய அளவில் எதிரொலிக்கும் பிரச்சினைகள்!

• தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்கள் மற்றும் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப் பது;

• என்.எல்.சி. நிறுவனத்தின் வேலை வாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது;

•இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் அகில இந்தியாவில் எதிரொலிக்கும் பிரச்சினைகள் குறித்தும் இரு அவைகளிலும் குரல் எழுப்ப வேண்டும்.

-இவ்வாறு தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

No comments:

Post a Comment