Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
மகாராட்டிரத்தில் உருமாறிய கரோனா வைரஸ் கண்டுபிடிப்பு
January 01, 2023 • Viduthalai

புனே, ஜன.1 அமெரிக்காவின் நியூயார்க்கில் கரோனா அதிகரிப்புக்கு காரணமான ஒமிக்ரான் எக்ஸ்பிபி.1.5 தொற்று குஜராத்தில் ஒருவருக்கு கண்டறிப்பட்டுள்ளது. இதனால் அண்டை மாநிலமான மகாராட்டிரா, தீவிர தடுப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்துகிறது.

கரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக்கொண்டே இருக்கிறது. ஒமிக்ரானின் இரண்டு வெவ்வேறான பிஏ.2 துணைப் பிரிவுகளின் இனக்கலப்புதான் எக்ஸ்பிபி வகைதொற்று . இதன் வழித்தோன்றல் தான் எக்ஸ்பிபி.1.5 வகை. இதன் பரவல் வேகம் அதிகமாக உள்ளது என அமெரிக்க விஞ்ஞானி எரிக் டோபோல் கூறியுள்ளார்.

குஜராத்தில் ஒருவருக்கு எக்ஸ்பிபி.1.5 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அண்டை மாநிலமான மகாராட் டிராவில் இந்த தொற்று பரவாமல் இருப்பதில் அங்குள்ள சுகாதார அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். இது குறித்து மகாராட்டிரா மாநிலத்தின் கண்காணிப்பு அதிகாரி மருத்துவர் பிரதீப் அவாதே கூறுகையில், ‘‘புதிய வைரஸ் தொற்றின் மரபணுதடயங்களை தீவிரமாக கண்காணிக்கிறோம். மகாராட்டிரா மாநிலத்துக்கு வரும் பன்னாட்டு பயணிகளிடம் உடல் வெப்ப பரிசோதனை மற்றும் 2 சதவீத பேரிடம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம். பாதிப்பு உள்ளவர்களின் மாதிரிகள்,மரபணு வரிசையை கண்டறியும் பரிசோ தனைக்கு அனுப்பப்படுகின்றன.

மகாராட்டிராவில் 275 பேருக்கு எக்ஸ்பிபி வகை கண்டறிப்பட்டது. எக்ஸ்பிபி.1.5 மற்றொரு உருமாற்றம். இந்தியாவில் இதன் பரவல்தன்மை குறித்து எதுவும் தெரியவில்லை. ஆனால், இதன் ஊடுருவலை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கைகளை நாங்கள் எடுக் கிறோம். எதிர்ப்பு சக்தி மற்றும்இனரீதியாக இதன் பரவல் தன்மை அமெரிக்காவிலும், இந்தியாவிலும் வேறுபடலாம்’’ என்றார்.

வைராலஜிஸ்ட் டாக்டர் ஷகித்ஜமீல் கூறுகையில், ‘‘கடந்த ஓராண்டாக ஏற்பட்ட பல வகை தொற்றுக்கள் எல்லாமே ஒமிக்ரானில் இருந்து தோன்றியதுதான். முற்றிலும் புதிய வகை உருவாகாமல் இருக்கும் வரை, நாம் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். ஏனென்றால் இந்தியாவில் 90 சதவீத வயது வந்தோர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர், 30 சதவீதம் பேர் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்’’ என்றார்.

226 பேருக்கு கரோனா ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம்   வெளியிட்டுள்ள புள்ளிவிவரம்: நேற்று (31.12.2022) காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 226 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4.46 கோடியாக உயர்ந்துள்ளது. மருத்துவமனை களில் சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிகளின் எண் ணிக்கை 3,653 ஆக உள்ளது.

நேற்று ஒரு நாளில் 3 பேர் கரோனாவால் உயிரிழந் துள்ளனர். இவர்கள் 3 பேரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இதன்மூலம் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,30,702 ஆக உயர்ந்துள்ளது.

தினசரி பாசிட்டிவ் விகிதம் 0.12 சதவீதமாகவும், வாராந்திர பாசிட்டிவ் விகிதம் 0.15 சதவீதமாகவும் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,87,983 பேருக்கு கரோனா பரி சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 22.10 கோடி பேருக்குகரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
''அரசமைப்புச் சட்டமும் - ஆளுநரின் அதிகார எல்லையும்'' தி.மு.க. சட்டக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
January 21, 2023 • Viduthalai
Image
முதலமைச்சர் மோடியைப் பார்த்து, பிரதமர் வாஜ்பேயி ''ராஜதர்மத்தைக் காப்பாற்றுங்கள்'' என்று சொல்லவேண்டிய அவசியம் என்ன?
January 27, 2023 • Viduthalai
Image
பெரியார் நினைவிடத்தில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மரியாதை - தமிழர் தலைவர் வாழ்த்து
January 23, 2023 • Viduthalai
Image
ஒரத்தநாட்டில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி
January 22, 2023 • Viduthalai
ஆசிரியர் விடையளிக்கிறார்
January 21, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn