தாய்-தந்தையின் அகம்பாவத்தால் குழந்தைகளின் வாழ்வு கடுமையாக பாதிக்கப்படுகிறது -உயர்நீதிமன்றம் வேதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 8, 2023

தாய்-தந்தையின் அகம்பாவத்தால் குழந்தைகளின் வாழ்வு கடுமையாக பாதிக்கப்படுகிறது -உயர்நீதிமன்றம் வேதனை

சென்னை, ஜன. 8- தாய், தந் தையிடம் உள்ள அகம் பாவச் செயல்களால், குழந்தைகளின் வாழ்வு கடுமையாக பாதிக்கப்படு வதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

மனைவியின் கட்டுப் பாட்டில் உள்ள இரட் டைக் குழந்தைகளை மீட் டுத்தரக்கோரி அமெரிக்க வாழ் இந்தியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில், "தானும், தனது மனைவியும் இந்தி யாவில் பிறந்திருந்தாலும் தற்போது அமெரிக்க குடிமக்கள் என்பதால் பிறப்பால் தனது இரு குழந்தைகளும் அமெ ரிக்க குடிமக்கள். கடந்த 2020ஆ-ம் ஆண்டு டிசம் பர் மாதம் தனது குழந் தைகளை இந்தியாவுக்கு அழைத்து வந்த மனைவி, அவர்களை மீண்டும் அமெரிக்காவுக்கு அழைத்து வரவில்லை. 

எனவே தனது குழந் தைகளை மனைவியிட மிருந்து மீட்டு மீண்டும் அமெரிக்காவுக்கு அழைத் துச் செல்ல அனுமதிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் பிறப்பித்த உத் தரவில் கூறியிருப்பதாவது:- 

குழந்தைப் பருவம் தான் ஒரு மனிதனின் குணநலன்களை உருவாக் கும் முக்கிய காரணியா கும், அதனால், குழந்தைப் பருவத்தில் மகிழ்ச்சியாக வாழவேண்டும். ஆனால், தாய், தந்தையிடம் உள்ள அகம்பாவச் செயல்க ளால், அவர்கள் போடும் சண்டைக்கு, குழந்தைகள் சாட்சியாக இருந்து வரு வதும், பெரும்பாலான சண்டையில் குழந்தை களின் வாழ்வு அடகு வைக்கப்படுவதும் வேதனைக்குரியதாகும். பெற்றோரின் செயல்க ளால் குழந்தைகளின் வாழ்வு கடுமையாக பாதிக் கப்படுகிறது. இப்படிப் பட்ட சூழ்நிலையில் வளரும் குழந்தை எப்படி நல்லதொரு மனிதனாக நட்புறவுடன் எதிர்காலத் தில் வாழ்வார்கள்? என் பது பல மில்லியன் கேள் வியாகும்.

பெற்றோரின் அகம் பாவச் செயல்களால் பாதிக்கப்படும் குழந்தை கள் தொடர்பான வழக் குகள் தினமும் எங்கள் முன்பு விசாரணைக்கு வருகிறது. 2020ஆ-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தாத்தா பாட்டியை பார்க்க இந்தியா வந்து, பெற்றோரிடையே ஏற் பட்ட தகராறினால், இங்கேயே மனுதாரரின் இரு குழந்தைகளும் தங்கி விட்டனர். 

ஆனால், அவர்கள் இருவரும் அமெரிக்கப் பள்ளிக்கூடம் நடத்தும் இணையவழி வகுப்பில் பங்கேற்று படித்து வரு கின்றனர். அதாவது, இந் திய நேரப்படி நள்ளிரவு வகுப்புகள் நடக்கின்றன. இணையவழி வகுப்பி னால், சக மாணவர்களு டன் பழகும் வாய்ப்பு இவர்களுக்கு இல்லை. எனவே, குழந்தைகள் நலன் கருதி, உச்சநீதிமன் றம் இதுதொடர்பான வழக்குகளில் பிறப்பித் துள்ள தீர்ப்புகளின்படி, முடிவு எடுக்க வேண்டிய துள்ளது. 

அமெரிக்க குடியு ரிமை பெற்றுள்ள இந்த குழந்தைகள், அங்குள்ள வாழ்க்கை முறைப்படி தான் வளர வேண்டும். அமெரிக்க நீதிமன்றம், குழந்தைகள் தந்தையின் கட்டுப்பாட்டில் வளர வேண்டும் என்று உத்தர விட்டுள்ளது. எனவே, குழந்தைகளின் எதிர் காலம், கல்வி மற்றும் வாழ்க்கை முறைகளை கருத்தில் கொண்டு அந்த குழந்தைகளை 6 வார காலத்துக்குள் தந்தையி டம் தாயார் ஒப்படைக்க வேண்டும். குழந்தைகள் தொடர்பாக வேறு ஏதே னும் நிவாரணம் வேண் டும் என்றால், அமெரிக்க நீதிமன்றத்தை தாயார் அணுகலாம். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment