முதுபெரும் பெரியார் தொண்டர் ஈரோடு எழுத்தாளர் அறிவுக்கன்பனின் வாழ்விணையர் வசந்தா தமது 82 வயதில் 6.1.2023 அன்று காலை 7 மணியளவில் இயற்கை எய் தினார். அவரது உடல் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டது. அதற்கு முன்பாக ஈரோடு அரசன் கண் மருத்துவமனைக்கு கண்கள் வழங்கப்பட்டன. அவர்களுக்கு நெடுமாறன், இளமாறன், திருமாறன் ஆகிய மூன்று மகன்களும், தேனருவி என்ற மகளும் உள்ளனர். செய்தி அறிந்த அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண் முகம், மண்டல தலைவர் இரா.நற்குணன், மாவட்டத் தலை வர் கு.சிற்றரசு ஆகியோர் நேரில் சென்று அறிவுக்கன்பன், மகன்கள், மற்றும் அவரது மகளுக்கும் இரங்கலையும் - ஆறுதலையும் தெரிவித்தனர்.
தொடர்புக்கு: எண்: 9843261060, 9442661182.
- - - - -
கிருஷ்ணகிரி மாவட்ட திராவிடர் கழக மேனாள் இளைஞரணி தலைவர் இல.ஆறுமுகத்தின் தந்தை லட்சுமணன் (வயது 73) 9.1.2023 அன்று மறைவுற்றார். ஆறுமுகத்திற்கும், அவரது குடும்பத்தினர்க்கும் ஒசூர் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் கா.மாணிக்கம், நகரதலைவர் கோ.தங்கராசு, ப.க. நகர செயலாளர் ச.நாகராஜ் ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment