பாலியல் தொந்தரவு மல்யுத்த கூட்டமைப்பு தலைவரான பா.ஜ.க. எம்.பி.க்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 20, 2023

பாலியல் தொந்தரவு மல்யுத்த கூட்டமைப்பு தலைவரான பா.ஜ.க. எம்.பி.க்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்

 


புதுடில்லி, ஜன. 20- இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரு மான பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகவும் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனக்கூறி டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இந்திய மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் உலக வாகையர் பதக்கம் வென்ற வினேஷ்போகத், சரிதா, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, சாக் சிமாலிக் உள் ளிட்ட 30 மல்யுத்த வீரர், வீராங் கனைகள் கலந்துகொண்டனர். இவர்களது போராட்டம் நேற்று 2ஆவது நாளாக தொடர்ந்தது.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு ஒன்றிய விளையாட்டு துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது.அதில், “72 மணி நேரத்துக்குள்கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று 2ஆவது நாளாக வீராங் கனைகள் போராடிய நிலையில் காலையில் சில மல்யுத்த வீரர்களை ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சக அலுவலக அதிகாரிகள் அழைத்து பேசினர். இதில் திருப்தி ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

வினேஷ் போகத் கூறும்போது, “எங்கள் போராட்டத்தின் 2ஆவது நாளில் அரசாங்கத்திடம் இருந்து திருப்திகரமான பதில் கிடைக்க வில்லை. பிரிஜ் பூஷன் சரண் சிங் பதவி விலகி சிறையில் அடைக்கப் படுவதை உறுதி செய்வோம். அவர் மீது நாங்கள் வழக்கு தொடரு வோம்’’ என்றார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு அதிகாரிகள் மற்றும் பயிற்சியா ளர்களுக்கு எதிராக நட்சத்திர மல்யுத்தவீராங்கனைகளான சாக் ஷி மாலிக்,வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் குற்றச்சாட்டுகளை கூறியதை அடுத்து டில்லி மகளிர் ஆணை யத்தின் தலைவர் ஸ்வாதி மாலி வால், டில்லி காவல்துறை, ஒன்றிய விளையாட்டு அமைச்சகத்திற்கு விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்பி யுள்ளார். இதற்கிடையே, இந்திய மல் யுத்த கூட்டமைப்பின் செயற் குழு மற்றும் வருடாந்திர பொதுக் குழு கூட்டம் வரும் 22ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தின் அயோத்தி யில் நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment