ஆளுநர்கள் செயல்பாடு பற்றி நாடாளுமன்றத்தில் தி.மு.க. முறையீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 31, 2023

ஆளுநர்கள் செயல்பாடு பற்றி நாடாளுமன்றத்தில் தி.மு.க. முறையீடு

புதுடில்லி, ஜன. 31- அனைத்து கட்சி கூட்டத்தில், ஆளுநர்கள் செயல்பாடுகள் குறித்து தி.மு.க., பி.ஆர்.எஸ். ஆகிய கட்சிகள் பிரச்சினை எழுப்பின. 

நாடாளுமன்ற நிதிநிலை கூட்டத் தொடர் இன்று (31.1.2023) தொடங்குகிறது. இரு அவைகளும் அடங்கிய கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். அதைத்தொடர்ந்து, பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. நாளை (1.2.2023) நிதிநிலை தாக்கல் செய்யப்படுகிறது. கூட்டத்தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 14ஆம் தேதி முடிவடைகிறது. 2ஆவது பகுதி, மார்ச் 12ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி நிறைவடைகிறது. மொத்தம் 27 அமர்வுகள் கூட்டத்தொடர் நடக் கிறது. இந்ததொடரில், 36 மசோதாக் களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அதே சமயத்தில் வேலையின்மை, விலைவாசி உயர்வு, சீனப்படைகள் அத்துமீறல், அதானி விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட் டுள்ளன.

இந்த கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்காக, ஒன்றிய அரசு நேற்று (30.1.2023) அனைத்து கட்சி கூட்டம் நடத்தியது. அதில், ஒன்றிய அரசு தரப்பில் ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், பியூஸ் கோயல், பிரகலாத் ஜோஷி மற்றும் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா (தி.மு.க.), தம்பிதுரை (அ.தி.மு.க.), ஜி.கே.வாசன் (த.மா.கா.), பரூக் அப்துல்லா (தேசிய மாநாட்டு கட்சி) உள்பட 27 கட்சிகளை சேர்ந்த 37 பிரதிநிதிகள் பங்கேற்றனர். காங்கிரஸ் சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை.

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்சய்சிங், ராஷ்டிரீய ஜனதாதளத்தை சேர்ந்த மனோஜ் ஜா மற்றும் தி.மு.க., இடதுசாரி கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்: 

அதானி குழுமம் பங்குச்சந்தையில் மோசடி செய்ததாக கூறப்படும் பிரச்சி னையை எழுப்பினர். அப்பிரச்சினை நிதிநிலை பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அதானி குழுமத்தில் எல்.அய்.சி. முதலீடு பற்றியும் நாடாளு மன்றத்தில் விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று மனோஜ் ஜா கூறினார். ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.பி. விஜய்சாய் ரெட்டி, நாடு முழுவதும் பிற்படுத்தப் பட்ட ஜாதியினரின் பொருளாதார பின்னணியை அறிய கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அவரது கோரிக்கையை திரிணாமுல் காங்கிரஸ், பிஜூ ஜனதாதளம் ஆகிய கட்சிகள் ஆதரித்தன. தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்களின் ஆளுங் கட்சி களான தி.மு.க., பி.ஆர்.எஸ். (பாரதீய ராஷ்டிர சமிதி) ஆகியவை ஆளுநர் களின் செயல்பாடுகள் குறித்து பிரச் சினை எழுப்பின. திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சுதீப் பந்தோபாத் யாயா, பி.பி.சி. ஆவணப்படம் குறித்த சர்ச்சையை எழுப்பினார். அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை, கச்சத்தீவு பிரச்சினை, இலங்கை தமிழர், தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தினார். பெண்களுக்கான இட ஒதுக்கீட்டையும் குறிப்பிட்டார்.

அனைத்து கட்சி கூட்டம் முடிவடைந்த பிறகு, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- விதிக ளின்படியும், மக்களவைத் தலைவர் அனுமதியுடனும், ஒவ்வொரு பிரச்சி னையையும் நாடாளுமன்றத்தில் விவா திக்க ஒன்றிய அரசு தயாராக உள்ளது. சபையை சுமுகமாக நடத்த எதிர்க் கட்சிகளின் ஒத்துழைப்பை கேட்டுள் ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment