Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
இந்தியாவில் அதிகரிக்கும் புற்று நோய் மரணங்களும் - காரணங்களும்!
January 21, 2023 • Viduthalai

அமெரிக்காவில் புற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை  33% குறைந்துள்ளது என்று அமெரிக்காவின் புற்று நோய் ஆய்வுக் கழகம் தெரிவித்துள்ளது.

முன்கூட்டியே, ஆராய்ந்து கண்டறிவதாலும், புகைபிடிப்பதை குறைத்து கொள்வதாலும் இந்த சதவிகிதம் குறைந்துள்ளது. மேலும் புற்று நோய்க்கு வழங்கப்படும் மருத்துவம் வளர்ச்சியடைந்ததும் ஒரு முக்கிய காரண மாக பார்க்கப்படுகிறது.இந்த தன்மை இந்தியா விலும் பிரதிபலிக்க வேண்டும் என்று கூறப் படுகிறது. இது தொடர்பாக புற்றுநோய் பற்றி ஆய்வுகளை வெளியிடும் ஆய்வு நாளிதழில், முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில்  2012 முதல் 2019- வரை பெண்களுக்கு ஏற்படும் சர்விக்கல் கேன்சர் 65 சதவிகிதம் குறைந்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை சர்விக்கல் புற்றுநோய் மற்றும் புகைப்பிடிப்பதால் ஏற்படும் புற்றுநோய் குறைந்தபாடில்லை.

நுரையீரல் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

2022இல் 14.6 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவே 2021இல் 14.2 லட்சமாகவும், 2020இல் 13.9 லட்சமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலானது அய்சிஎம்ஆர் (இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்) சார்பாக நாடாளுமன்றத்தில் சமர்பிக்கபட்டது. இதுபோல புற்றுநோயால் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை 2022இல் 8.08 லட்சமாக இருந்தது. 2021இல் 7.9 லட்சமாகவும்,  2020இல் 7.7 லட்சமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2025இல் 15.7 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தரவுகள் கூறுகின்றன. ஒன்பது நபர்களில் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக அய்சிஎம்ஆர்  தெரிவித்துள்ளது. இதுபோல 68 ஆண்களில் ஒருவருக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படவும், 29 பெண்களில் ஒருவருக்கு மார்பகப் புற்று நோய் வருவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆண்களைவிட பெண்களுக்கு புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம். ஆண்களுக்கு, வாய், நுரையீரல், போஸ்ட் ரேட், வயிறு தொடர்பான புற்றுநோய் ஏற்படுகிறது. பெண்களுக்கு மார்பகம், சர்விக்கல், கர்ப்பப்பை, நுரையீரல் தொடர்பாக புற்று நோய் அதிகமாக ஏற்படுகிறது. பெண்களுக்கு ஏற்படும் சர்விக்கல் கேன்சர் விகிதம் இந்தியாவில் குறைந்துள்ளது. ஆனால் நகர்புறங்களில் மார்பகப் புற்று நோய் அதிகரித்துள்ளது.

புற்றுநோயால் ஏற்படும் மரணங்களை  எப்படி கட்டுப்படுத்துவது? நோயின் தன்மை அதிகரிக்கும் முன்பே கண்டறிவதால், மார்பகப் புற்று நோய்,  சர்விக்கல் புற்று நோய், வாய் புற்றுநோய் ஆகியவையை குணப்படுத்த முடியும். அரசின் சுகாதார மய்யங்கள் இதற்காக பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்துள்ளன.

இதுபோல் புற்றுநோய் கண்டந்தவுடன் அதற்கான மருத்துவத்தை முறையாக எடுத்துக்கொள்ள வேண்டும். 10 லட்சம் பேருக்கு ஒரு ரேடியோ தெரப்பி மெசின் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இந்தியாவின் மக்களை தொகையை வைத்து கணக்கிட்டால் 1,400 மெசின்கள் தேவை. ஆனால், நம்மிடம் 700 தான் இருக்கிறது என்று புற்றுநோய் மருத்துவர் ராத் கூறுகிறார்.

இந்தியாவில் இதயம் சமந்தமான நோய்கள்தான் முதல் இடத்தில் உள்ளது. ஆனால், தற்போது புற்று நோய் 2ஆம் இடத்தில் இருக்கிறது. இதனால் புற்று நோய் தொடர்பாக  நாம் கூடுதலாக விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள்  கூறுகின்றனர்.

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
காந்தியாரின் 76 ஆவது நினைவு நாள் இன்று!
January 30, 2023 • Viduthalai
Image
முதலமைச்சர் மோடியைப் பார்த்து, பிரதமர் வாஜ்பேயி ''ராஜதர்மத்தைக் காப்பாற்றுங்கள்'' என்று சொல்லவேண்டிய அவசியம் என்ன?
January 27, 2023 • Viduthalai
Image
பதிலடிப் பக்கம்
January 27, 2023 • Viduthalai
Image
அதானி நிறுவன ஊழல்
January 28, 2023 • Viduthalai
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை உடனே செயல்படுத்த வலியுறுத்திய மதுரை திறந்தவெளி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
January 28, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn