Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
January 02, 2023 • Viduthalai

சிந்தனையும் - மனிதர்களின் மாற்றமும்!

மார்க்கஸ் அரேலியஸ்

மனிதர்களின் வாழ்வில் ஏதோ ஒரு கட்டத்தில் மாறுதல்கள் ஏற்பட்டு 'பழைய மனிதன்' விடை பெற்றுக் கொண்டு அவர்களில் 'புதிய மனிதன்'  உள்ளே வந்து புகழுடம்பைப் பெற்று பின்னால் பல நூற்றாண்டுகள் உருண் டோடிய நிலை வர லாற்றின் நிலைத்த, பக்கங்களாகிய பாடங் களாகின்றான்!

கலிங்கப் போரினை மிக மூர்த்தண்யமாக நடத்தி வெற்றி யைக் குவித்த அசோக் சாம்ராட் மன்னனுக்கு வெற்றியின் ஒளி வேறு ஒரு வெளிச்சத்தைத் தந்தது! "இவ்வளவு உயிர்களை கொன்ற நாம், இரத்த வெள்ளத்தில் நீந்தி இந்த அரியணைச் சிம்மாசனத்தை அடைகிறோம். இதுவா சிம்மாச னம்? இல்லை சும்மாசனம்" என்று அவனுக்கு ஆறுதலும், அனுபவப் பாடமும் சொல்லி பகுத்தறிவைப் புகட்டியது!

அதுவே அவரது வாழ்வையும் புரட்டியது! 

அதுபோல மேற்கத்திய வரலாற்றில், கிறிஸ்த வர்களை அவர்களது மதத்திற்காக கொடுந் தொல்லைகளைக் கொடுத்து; ஏன் கொன்றும்கூட  மத வெறுப்புப் பிரச்சார ஏணிப் படிக்கட்டில் ஏறியே பல ஆண்டு காலம் ஆண்ட ரோமானியப் பேரரசன் மார்க்கஸ் அரேலியஸ் (கி.பி.121-180) என்பவர் தனது வாழ்நாளில் ஒரு சிறந்த தத்துவ ஞானியாகி, முந்தைய வெறுப்பான விளைச்சலை ஏற்க மறுத்தார்.

பிறகு இந்த மனிதன் - அரச ஞானியானார்! அவரது தத்துவங்களால், குறுகிய ரோம் நாட்டையும் தாண்டி, மக்கள் இதயச் சிம்மானத்தில் இன்றும் இடம் பெற்று வரலாற்றில் வைரமாக ஒளிர்கிறார்.

மனமாற்றங்கள்தான் மனிதன் பகுத்தறிவைக் கூர்மையாக் குவது!

விழுந்தவன் மாற்றம் தேவை யில்லை என்று எப்போதும் விழுந்து கிடப்பதா பகுத்தறிவு?

தவத்திரு குன்றக்குடி அடி களார்  அடிக்கடி கேட்டாரே அமுதமொழிக் கேள்வி.

"நேற்று விழுந்த இடத்தி லேயே - இன்றும் விழலாமா? நாளையும் இதே இடத்தில் விழ உறுதி பூண்டு விட்டீர்களா?" என்று!

"மாறுதல்தான் மாறாதது" என்பது புத்தரின் பகுத்தறிவுச் சிந்தனை - காரல் மார்க்சின் அறிவுரை - தந்தை பெரியாரின் சாட்டைச் சொடுக்கு, இப்படி அறிஞர்கள் பலரும் கேட்ட பிறகும் - மாறாதது எங்கள் தத்துவம் என்று கூறிடும் விசித்திர மனிதர்களின் விவஸ்தையற்ற அறிவினைப் பற்றி என்ன சொல்வது?

நாளும் நல்ல புதிய சிந்தனைகளால் உங் களைக் கூர் தீட்டிக் கொண்டு முனை மழுங்காத அறிவாளர்களாக ஆக்கிக் கொள்ளுங்கள் - முன்னேறலாம்!

மார்க்ஸ் அரேலியஸ் பேசுகிறார் கேளுங்கள்.

"உன்னால் ஒரு காரியத்தைச் செய்ய முடியாவிட்டால் அதனால், மற்ற மனிதர்களாலும் அதைச் செய்ய முடியாது என்று நினைத்து விடாதே  - மற்ற மனிதர்களால் செய்ய முடிகிற ஒரு காரியத்தை உன்னால் நிச்சயம் செய்ய முடியும்"

"என்னுடைய கடமைகளை நான் செய்கிறேன். அவ்வளவுதான். மற்றவைகளைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை"

"மற்றவர்கள் என்ன சொன்னாலும் சரி, நான் நல்லவனாகவே நடந்து கொள்வேன் என்பதே உன் குறிக்கோளாக இருக்கட்டும்"

"திடீரென்று எதிர்பாராதவிதமாக ஏற்படக் கூடிய கஷ்ட நஷ்ட நிஷ்டூரங்களைச் சமாளித்துக் கொள்ளுகிற மாதிரி உன் வாழ்க்கை இருக்க வேண்டும்"

"செல்வம் வந்தால் அதற்கு அகந்தை கொள்ளாமல் வரவேற்புக் கொடு. அப்படியே அதனைப் போக விடவும் தயாராக இரு."

"ஒருவரோடொருவர் சேர்ந்து வாழ்வதற்காகத் தான் மனிதர்கள் உலகத்தில் பிறக்கிறார்கள். ஆதலின், உன்னால் முடிந்தால் மற்றவர்களுக்கு உனக்குத் தெரிந்ததைச் சொல்லிக் கொடு, அல்லது அவர்களிடம் பொறுமை காட்டு"

"ஒரு நல்ல மனிதன் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதைப் பற்றி அதிகமாகப் பேசாதே! நீ நல்ல மனிதனாக நடந்து கொள்!"

"பொது நன்மைக்காக நான் ஏதேனும் செய்திருக்கிறேனா? இதுவே நீ, அடிக்கடி கேட்டுக்  கொள்ளும் கேள்வியாக இருக்கட்டும்!"

- இந்த அறிவு மொழிகள் - மாற்றத்தின் விளைச்சலே!

எனவே பழைமை - மூடத்தனத்திலிருந்து மாறிவிடத் தயாராகுங்கள்.

 

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
தமிழ்நாடு அரசு குறிப்பாக உயர்கல்வித் துறை தலையிட்டு உடனே தடுக்கட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை
February 06, 2023 • Viduthalai
Image
ஆழந்தெரியாமல் காலை விட்டு அவதிப்படாதீர்! ‘இந்து' ஏட்டின் ஆசிரியர் மாலினிக்கு எச்சரிக்கை!
February 02, 2023 • Viduthalai
Image
இனமலரின் ஈன புத்தி
February 05, 2023 • Viduthalai
Image
சமூகநீதி கோரி வரும் 11 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!
February 07, 2023 • Viduthalai
Image
திராவிடர் கழகத் தலைவர்மீது வன்முறையை தொடர்ந்து தூண்டும் 'தினமலர்!'
February 05, 2023 • Viduthalai

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn