Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
கல்லக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகளில் நடைபெற்ற பெரியார்-1000 போட்டித் தேர்வு பரிசளிப்பு விழா
January 25, 2023 • Viduthalai

கல்லக்குறிச்சி, ஜன. 25- கல்லக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மணலூர்பேட்டை நகரம், அத்தியந்தல் கிராமம், இவ்விடங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் பெரியார்-1000 தேர்வு சிறப்பாக நடைபெற்றது. இத் தேர்வில் மதிப்பெண் அடிப்படையில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வு 19.12.2022 அன்று அந்தந்தப் பள்ளிகளில் சிறப்பாக நடைபெற்றது.

மணலூர்பேட்டை அரசினர் பெண்கள் மேனிலைப்பள்ளியில், எஸ்.பிரிய தர்சினி 42/50, டி.நந்தினி 38/50, எம். ஜெயந்தி 37/50 ஆகிய மதிப்பெண்களுடன், முதல் மூன்று இடங்களைப் பெற்றனர்.

மணலூர்பேட்டை அரசினர் ஆண்கள் மேநிலைப்பள்ளியில், ஜீ.தேவா 32/50, கே.சசிகுமார் 30/50, இ. பெருமாள் 28/50 சி.அன்புக்குமரன் 28/50 ஆகிய மதிப் பெண்களுடன், முதல் மூன்று இடங்க ளைப் பெற்றனர்.

அத்தியந்தல் அரசினர் உயர்நிலைப் பள்ளியில், பி.தேவ் 26/50, எஸ் சந்தோஷ் குமார் 20/50, ஜி.திலீப்குமார் 18/50 ஆகிய மதிப்பெண்களுடன், முதல் மூன்று இடங்களைப் பெற்றனர்.

பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், தமிழ்நாடு முழுவதும் பெரியார் சிந்தனைகளை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில், தமிழ் நாடு அரசின் அனுமதியோடு, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அரசுப்பள்ளிகள், தனியார் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் பெரியார்- 1000, வினா-விடை போட்டி எழுத்துத்தேர்வை நடத்தியது. 

ஆயிரத் திற்கும் மேற்பட்ட பள்ளிகள் ஆர்வமுடன், இத்தேர்வில் கலந்து கொண்டன. ஒவ் வொரு பள்ளியிலும் மதிப்பெண் அடிப் படையில், முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு, "பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் இலட்சினை பொருத்தப்பட்ட தங்கப் பதக்கத்தை முதல் பரிசாகவும்; வெள்ளிப்பதக்கத்தை இரண்டாம் பரிசாகவும்; வெண்கலப் பதக்கத்தை மூன்றாம் பரி சாகவும் வழங்குகிறது. தேர்வில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்கட்கும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. 

மேலும் இத்தேர்வை நடத்த முன்வந்த அனைத்து பள்ளிகளுக்கும் பங்கேற்ற மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், பிரத்தியேமாகத் தயாரிக்கப்பட்ட 12" ஜ் 18" அளவுள்ள பெரியார் படமும் வழங்கப்படுகிறது. மேலும், மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு, மாவட்ட பொறுப்பாளர்கள் மூலம், உரிய நன்கொடையாளர்களை அணுகி, முதல் பரிசாக ரூ.5000- பணமுடிப்பும், இரண்டாம் பரிசாக ரூ.3000- பணமுடிப்பும், மூன்றாம் பரிசாக ரூ.2,000- பணமுடிப்பும் அளிக்கப்பட்டு வருகிறது.

மணலூர்பேட்டை, அரசு பெண்கள் மேநிலைப்பள்ளியிலும், அரசு ஆண்கள் மேநிலைப்பள்ளியிலும், அத்தியந்தல் அரசினர் உயர்நிலைப்பள்ளியிலும் இப் பரிசளிப்பு நிகழ்வுகளை திருக்கோவிலூர் ஒன்றிய கழகத் தலைவர் மு.இளங்கோவன், மணலூர்பேட்டை நகர கழகத் தலைவர் சி.அய்யனார்; நகரச் செயலாளர் பா.சக்தி, ஜம்பை கிளைக்கழகத் தலைவர் அ.தமிழரசன், செயலாளர் வை.சேகர், முருக்கம் பாடி கிளைகழகத் தலைவர் மா.கணபதி ஆகிய தோழர்கள், பள்ளித் தலைமை யாசிரியர், ஆசிரியர்களுடன் இணைந்து சிறப்பாக விழாவை நடத்தினர்.

அத்தோடு, மூன்று பள்ளிகளிலும் தேர்வெழுதிய 140 மாணவ, மாணவிகளுக்கும், "அறிவு விருந்து”, ”சிந்தனையும் பகுத்தறிவும்" என்ற நூல்களை நன்கொடையாக வழங்கினார் கள். மொத்தத்தில், மூன்று பள்ளிகளிலும் விழா சிறப்பாக நடைபெற்றது.

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
ஆழந்தெரியாமல் காலை விட்டு அவதிப்படாதீர்! ‘இந்து' ஏட்டின் ஆசிரியர் மாலினிக்கு எச்சரிக்கை!
February 02, 2023 • Viduthalai
Image
தமிழ்நாடு அரசு குறிப்பாக உயர்கல்வித் துறை தலையிட்டு உடனே தடுக்கட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை
February 06, 2023 • Viduthalai
Image
இனமலரின் ஈன புத்தி
February 05, 2023 • Viduthalai
Image
திராவிடர் கழகத் தலைவர்மீது வன்முறையை தொடர்ந்து தூண்டும் 'தினமலர்!'
February 05, 2023 • Viduthalai
ஈரோடு முதல் கடலூர் வரை சுற்றுப்பயணம்
February 02, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn