தனியாகச் சென்ற மாணவியை கொடூரமாக தாக்கி சாலையில் வீசிச்சென்ற இளைஞர் பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேசத்தில் நடந்த கொடூரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 25, 2022

தனியாகச் சென்ற மாணவியை கொடூரமாக தாக்கி சாலையில் வீசிச்சென்ற இளைஞர் பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேசத்தில் நடந்த கொடூரம்

போபால் டிச. 25 மத்தியப் பிரதேசத்தில் பள்ளி மாணவி ஒருவரை தாக்கி சாலையில் மயக்க நிலையில் விட்டுச் சென்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். 

 மத்தியப் பிரதேசம் மாநிலம் ரேவா மாவட்டத்தில் பள்ளிசென்று திரும்பி கொண்டு இருந்த மாணவியை தாக்கி சாலையில் மயக்க நிலையில் சுய நினைவின்றி விட்டுச்சென்ற இளை ஞரையும் அவருடன் இருந்த தாக் குதலை படம் எடுத்த அவரது நண் பரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.  மவுகஞ்ச் காவல் நிலையத் துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 21-ஆம் தேதி இந்த நிகழ்வு நடந்துள்ளது. பள்ளிக்குச்சென்று திரும்பிக்கொண்டு இருந்த மாணவியை கொடூரமாக தாக் கும் காணொலி காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து காவல்துறையினர் வழக் குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத் துள்ளனர். அந்த காட்சிப் பதிவில் அந்த நபர் மாணவியை கண்மூடித்தனமாக தாக்கி கீழே தள்ளி காலால் உதைக்கும் கொடூர காட்சிகள் இடம்பெற்றுள் ளன. பலமாக தாக்கப்பட்ட அந்த மாணவி மயக்கமடைந்தார். இதை யடுத்து அந்த நபர் அந்த மாணவியை அப்படியே சாலையில் விட்டுவிட்டு நிகழ்வு இடத்திலிருந்து தப்பி ஓடி விட்டார். நீண்ட நேரமாக அவர் அங்கு மயங்கி கிடந்துள்ளார். இதை யடுத்து அந்த இடத்துக்கு வந்த கிராம மக்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். நிகழ்வு இடத்திற்கு வந்த காவலர்கள் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். கொடூர மாக தாக்கிய அந்த நபர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 151-இன் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். விசாரணையில் அந்த இளைஞர் மாணவியை ஒரு தலை யாக காதலித்தாகவும், அந்தப் பெண் காதலை ஏற்காததால் ஆத்திரத்தில் அவரை கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.


No comments:

Post a Comment