இந்தியாவிலேயே முதன்முறையாக நீலகிரி வரையாடு திட்டத்தை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 30, 2022

இந்தியாவிலேயே முதன்முறையாக நீலகிரி வரையாடு திட்டத்தை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு

நீலகிரி, டிச.30 இந்தியாவிலேயே முதன்முறையாக நீலகிரி வரையாடு திட்டத்தை அமைத்து தமிழ்நாடு அரசு   ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி மலைப் பிரதேசங்களில் வசித்துவரும், நீலகிரி வரையாடு களை பாதுகாக்க ரூ.25.14 கோடியில் 5ஆண்டுத் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித் துள்ளது

நீலகிரி வரையாடு மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கே உரிய சிறப்பினங்களில் ஒன்றாகும். இவை 4000 அடி உயரத்திற்கு மேலேயுள்ள மலை முகடுகளில் மட்டும் வாழும் பண்புடையன. மிகவும் அழிந்து வரும் இனங்களில் ஒன்றான இவ்விலங்கு தமிழ் நாடு மற்றும் கேரள மாநிலங்களில் ஒரு சில குறிப்பிட்டப் பகுதிகளில் மட்டும் காணப்படுகிறது. 

வரையாடு தமிழ் நாட்டின் மாநில விலங்கு என்பதும் தமிழ் நாட்டில் சில நூறு வரை யாடுகளே எஞ்சியுள்ளன என்பதும் குறிப் பிடத்தக்கது. 

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது: தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி வரையாடு இனத்தை பாதுகாக்கவும் அதன் வாழ்விடங்களை மேம்படுத்தவும் இந்தியாவிலேயே முதன்முறையாக நீலகிரி வரையாடு திட்டத்தை அமைத்து தமிழ்நாடு அரசு  28.12.2022 அன்று ஆணை வெளியிட்டுள்ளது. 

இத்திட்டம் 2022 முதல் 2027 வரை அய்ந்து ஆண்டு களில் ரூ.25.14 கோடி செலவில் செயல்படுத் தப்படும். நீலகிரி வரை யாடு மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கே உரிய சிறப்பினங்களில் ஒன்றாகும். இந்த வரையாடு பற்றிய குறிப்புகள் அய்ம்பெருங்காப்பியங் களில் இரு காப்பியங்களான சிலப் பதிகாரம் மற்றும் சீவகசிந்தாமணி யில் காணப்படுகின்றன.

நீலகிரி வரையாடு திட்டம் பல் வேறு உத்திகள் மூலம் செயல் படுத்தப்பட உள்ளது. ஆண்டுக்கு இருமுறை ஒருங்கிணைந்த கணக் கெடுப்பு. டெலிமெட்ரிக் ரேடியோ காலரிங் (collaring) பொருத்தி தொடர்ந்து பாதுகாத்தல், பழைய வாழ்விடங்களில் மீண்டும் வரை யாட்டினை அறிமுகம் செய்தல், நோய் கண்டறிந்து பாதிக்கப்பட்ட வரையாட்டிற்கு சிகிச்சை அளித்தல், சோலை புல்வெளிகளை சீரமைத் தல், களப்பணியாளர்களுக்கு தள வாடங்கள் மற்றும் பயிற்சி அளித்தல், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 7ஆம் தேதியை “வரையாடு தினம்” என அனுசரித்தல் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் நீலகிரி வரையாடுகள் இனம் அழிவிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக் கப்படும். நீலகிரி வரையாடு இனம் மிஹிசிழி-னால், அழிந்து வரும் வகைப்படுத்தப்பட்டு. வன உயி ரினம் உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972 முதல் அட்டவணையின் கீழ் பட்டியலிடப்பட்டு பாதுகாக்கப் பட்டு வருகிறது. 

உலகளாவிய இயற்கை பாது காப்பு நிதிய அறிக்கை (WWF) 2015-ன் படி 3:122 வரையாடுகள் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ளதாக கணக்கிடப் பட்டுள்ளது. பன்னாட்டு அளவில் அதி முக்கியமான பல்லுயிர் மண்டலம் என அங்கீகரிக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை இவை வாழ்விடமாக கொண்டுள் ளன. மிக பரந்த அளவில் வாழ்ந்து வந்த இந்த வரையாடு இனம், எண்ணிக்கை குறைந்து அழிவுக்கு ஆளாகுதல், வெளிநாட்டு  களைச் செடிகளின் ஆக்கிரமிப்பு, காட்டுத் தீ, பிற மானுடவியல் அழுத்தங்கள், சுற்றுச்சூழல் தரவு மற்றும் பாதுகாப்பு திட்டமிடலுக்கான புரிதல் இல்லாமை காரணமாக தற்போது தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்குள் சில சிதறிய வாழ்விடப் பகுதிகளில் மட்டுமே வாழ்ந்து வருகின்றன. 

இந்த நீலகிரி வரையாடு திட்டத்தின் மூலம் இவற்றின் உண்மையான வாழ்விடங்கள் மீட்கப்பட்டு அவற்றிற்கு உரிய வாழ்விடங்களில் இந்த இனங்கள் மீள் அறிமுகம் செய்யப்பட்டு அவை வாழ ஏதுவான சூழல் உருவாக்கி அவற்றின் எண்ணிக்கை பெருக நடவடிக்கை எடுக்கப்படும்.


No comments:

Post a Comment