திருச்சி,டிச.30- தமிழ்நாட்டில் குருதியை எடுத்து ஓவியம் (Blood Art) வரைவதற்கு தடை விதிக்கப் படுவதாக மருத்துவம் மற்றும் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “தற்பொழுது இந் தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஒரு புதிய கலாச்சாரம் ஒன்று தலைதூக்கியுள்ளது. Blood Art என்று சொல்லக்கூடிய வகை யில் குருதியை எடுத்து ஓவியம் வரைந்து, விரும்புவர்களுக்கு அனுப்புவது. குறிப்பாக காதலன் காதலிக்கு அனுப்புவது, காதலி காதலனுக்கு அனுப்புவது போன்ற பழக்கம் புதியதாக வந்துக் கொண் டிருக்கிறது. Blood Art Centres என்று ஆரம்பித்து அதனை ஒரு தொழிலாக செய்து வருகின்றனர். இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
குருதி தானம் என்பது பல உயிர்களை காக்க பயன்படுகிறது. அந்த குருதியை வைத்து ஓவியம் வரைவது சரியான அணுகுமுறை யல்ல. உடலில் உள்ள குருதியை எடுக்கும் போது மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், அதற்கு தேவையான ஊசியினை முறையாக பயன்படுத்தி குருதியை எடுத்து, பாது காப்பார்கள். ஆனால், ஓவியத்திற்காக எடுக்கப்படும் குருதி என்பது முறை யாக பாதுகாப்பு இல்லாத ஒன்றா கும். அதோடு மட்டுமல்லாமல் குருதி எடுக்க பயன்படுத்துகின்ற ஊசி எத்தனை பேருக்கு பயன்படுத் துகிறார்கள் என்பது தெரியாது.
எனவே, விதிமுறைகளின்படி இந்த குருதி எடுக்காத நிலையில் அந்த குருதி படம் வரைவதற்கு கையாளும்பொழுது, அந்த குருதி எச்.அய்.வி போன்ற நோய் பாதிப் பிற்கு உள்ளானவர்களிடமிருந்து எடுக்கப்பட்டால் அது பலரை தாக்கி, பாதிப்பிற்குள்ளாக்கும்.
எனவே, இந்த தகவல் தெரிந்தவுடன் 28.12.2022 அன்று சென்னையில், வடபழனி மற்றும் தியாகராய நகர் பகுதியில் இருக் கின்ற Blood Art நிறுவனங்களை நமது மருத்துவத் துறை அதி காரிகள் ஆய்வு செய்தார்கள். அங்கிருந்து அதற்காக பயன்படுத் தப்படுகின்ற குருதி குப்பிகள், ஊசி, வரைந்து வைத் திருந்த படங்களை எல்லாம் பறி முதல் செய்து, அவர்களுக்கு எச்சரிக்கையும் விடப்பட்டிருக்கிறது. இதோடு இந்த தொழிலை நிறுத் திக்கொள்ள வேண்டும் இல்லை யென்றால் நிறுவனம் அல்லது கடைகளுக்கு சீல் வைக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று முதல் குருதி ஓவியம் (Blood Art) வரைகின்ற அந்த பணியை நிறுத்திக்கொள்ள வேண் டும். ஓவியத்தை வரைவதற்கு ஏராளமான வழிகள் இருக்கின்றது, குருதியை எடுத்துதான் வரைய வேண்டும் என்றில்லை. குருதி என்பது பல உயிர்களை காக்க பயன்படுகிறது.
எனவே இந்த Blood Art நிறுவனங்களுக்கு இன்று முதல் தமிழ்நாட்டில் தடை விதிக் கப்படுகிறது. இதை யாராவது மீறி னால் சட்டபூர்வமான நடவடிக் கைகளுக்கு உட்படுத்தப்படு வார்கள்.
இளைஞர்கள் இந்த குருதி ஒவி யத்தின் மீது ஆர்வம் காட்டக் கூடாது, மேலும் இதை வரையும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளக்கூடாது என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. அன்பை பரிமாறிக் கொள்வதற்கு, நட்பை வெளிப்படுத்திக்கொள்வதற்கு, காதலை வெளிபடுத்துவதற்கு ஏரா ளமான வழிகள் உள்ளது, குருதி ஓவியம் வரைந்துதான் அதனை வெளிப்படுத்திக்கொள்ள வேண் டும் என்று அவசியம் இல்லை" என்று அமைச்சர் கூறினார்.
No comments:
Post a Comment