தமிழ்நாட்டில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது: அமைச்சர் சிவசங்கர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 9, 2022

தமிழ்நாட்டில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது: அமைச்சர் சிவசங்கர்

நாமக்கல், டிச. 9- தமிழ்நாட்டில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படாது என நாமக்கல்லில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். தமிழ்நாடு போக்கு வரத்து துறை அமைச்சர் சிவசங்கர், 7.12.2022 அன்று நாமக்கல்லில் கூறுகையில், தமிழ்நாட்டில் புதிதாக 1000 பேருந்துகள் வாங்க, ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி நடைமுறையில் உள்ளது. பிற மாநிலங் களில் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டாலும் கூட, தமிழ்நாட்டில் உயர்த்தக் கூடாது என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

அதே சமயம், நட்டத்தில் இருந்து போக்குவரத்துக் கழகங்களை மீட்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மக்களின் நலனை கருத்தில் கொண்டு, பேருந்து கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது. தமிழ்நாட்டில் டீசல் பேருந்துகளுக்கு பதிலாக, மின்சார பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மின்சார பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது, என்றார். அரு கில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் உடனிருந்தார்.


No comments:

Post a Comment