நூறாண்டு வாழியவே! - பட்டுக்கோட்டைத் தமிழ்அன்பன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 2, 2022

நூறாண்டு வாழியவே! - பட்டுக்கோட்டைத் தமிழ்அன்பன்

மக்களின் மனதிலே பெரியார் - என்றும்

வலம்வர வழிவகை கண்டு

குக்கலைப் போல்கவே பொருளின்றி - நாளும்

குரைப்பவர் வாலையும் நறுக்கி

சிக்கல்க ளனைத்தும் அறமன்றில் - நல்ல

தீர்வாலே நயன்மை பெற்று

மக்கேதும் வைத்துப் பேசிடாத - 'வீர

மணி'யார் வாழ்கென வாழ்த்துவனே!

அறைகூவல் விடுக்கின்ற அறிக்கை - அதுவும்

அயராது தீட்டுகின்ற தன்மை

சிறையேக மறுக்காத நெஞ்சம் - தொய்வு

சிறிதேனும் இல்லாத உணர்வு

மறைபொருள் விளக்குகிற  ஆற்றல் - வழக்கில்

'மானமிகு' வழங்கிட்ட அண்ணல்

நிறைகுடம்போல் ததும்பாத அடக்கம் - தமிழர்

தலைவராம் 'வீரமணி' வாழியவே!

நெஞ்சினில் தூய்மையைத் தேக்கி - அறிவுத்

தெளிவினால் நாடொறும் பயிற்றி

வஞ்சம்என் பதுஅறியா சிந்தை - அது

வழங்குகிற எண்ணமும் விதைத்து

துஞ்சுவது ஒழிந்துமே பரப்புரை - செய்து

விஞ்சுநற் றழிழாலே விரிக்கும் - ஆசிரியர்

'வீரமணி' நூறாண்டு வாழியவே!

No comments:

Post a Comment