பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 8, 2022

பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை, டிச.8- பொறியியல் கல்லூரி களில் தமிழ்ப் பாடங்களை பயிற்றுவிக்க, தமிழ் இலக்கியப் பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் 510 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 7.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.

இந்நிலையில், தற்போதைய தொழில் நுட்பச் சூழலுக்கேற்ப பொறியியல் பாடத் திட்டம் மாற்றப்பட்டு, நடப்புக் கல்வியாண்டு (2022-2023) முதல் புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக, இளநிலை பொறியியல் படிப்புகளில் முதல் 2 பருவங்களில் (செமஸ்டர்) தமிழர் மரபு, தமிழரும்-தொழில்நுட்பமும் ஆகிய 2 கட்டாயப்பாடங்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டன. அதற்கான பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டு, கல்லூரிகளுக்கு வழங்கப் பட்டுள்ளது. இந்நிலையில், இந்தப் பாடங் களை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் கல்வித் தகுதி விவரங்களை அண்ணா பல் கலைக் கழகம் தற்போது வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக பல்கலை. பதிவாளர் ஜி.ரவிக்குமார், அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக் கையில் கூறியிருப்பதாவது:

தமிழர் மரபு, தமிழரும்-தொழில்நுட் பமும் ஆகிய பாடங்களை மாணவர்களுக்கு கற்பிக்க தமிழ் இலக்கியத்தில் பட்டப் படிப்பை முடித்தவர்கள் தகுதியானவர்கள். மேலும், பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி படித்த அறிவியல், பொறியியல், தொழில் நுட்பம் மற்றும் மனிதநேயப் பாடங்களின் பேரா சிரியர்களும் இந்தப் பாடங்களை பயிற்று விக்கலாம். இவ்வாறு சுற்றறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம்-சென்னை இடையே மீண்டும் விமான சேவை

கொழும்பு,டிச.8- இலங்கையின் வடக்கு யாழ்ப் பாணத்தில் இருந்து சென்னைக்கு மீண்டும் விமானங்களை இயக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சி பெறுவதுடன், நலிவடைந்த பொருளா தாரத்தை மீட்டெடுக்கவும் உதவி யாக இருக்கும். இலங்கைக்கு அந்நிய செலா வணியை ஈட்டித் தரும் முக்கிய ஆதாரமாக சுற்றுலாத்துறை விளங்குகிறது. எனினும், 2020 ஆம் ஆண்டில் கரோனா தொற்று பரவி, சுற்றுலாத் துறையை கடுமையாக முடக் கியது. அத்துடன், இலங்கையின் பொருளாதார நெருக் கடிக்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று. தற்போது யாழ்ப்பாணத்தின் பலாலியில் இருந்து இந்தியாவுக்கான விமானங்கள் விரைவில் இயக்கப்படும், அநேகமாக டிசம்பர் 12ஆம் தேதிக்குள் விமான சேவை தொடங்கப் படும் என இலங்கை விமான போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபாலா டி.சில்வா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.


No comments:

Post a Comment