சென்னை, டிச 13 மாண்டஸ் புயலை எதிர்கொண்ட விதத்தில் தமிழ்நாடு புதுச்சேரி அரசுகள் சிறப்பாக செயல் பட்டதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள் வதற்காக கன்னியாகுமரி சென்றார். அவர் நேற்று (12.12.2022) காலையில் கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாட்டில் தென் பகுதிக்கு வரும்போது தாய் வீட்டிற்கு வந்த உற்சாகத்துடன் வருகிறேன். தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநராக இருந்தாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் எனது பங்கு இருக்கும். தமிழ்நாடு அரசு 'மாண்டஸ்' புயலை சிறப்பாக எதிர்கொண்டது போல் புதுச்சேரியிலும் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டில் எவ்வளவு சேதம் ஏற்படும் என்று கருதப்பட்டதோ, அதேபோல் புதுச் சேரிக்கும் சேதம் எதிர்பார்க்கப்பட்டது. புயலை எதிர்கொண்ட விதத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகள் சிறப்பாக செயல்பட்டன. இவ்வாறு கூறினார்.
Tuesday, December 13, 2022
Home
தமிழ்நாடு
'மாண்டஸ்' புயல் : தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டது பாராட்டுகிறார் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும்!
'மாண்டஸ்' புயல் : தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டது பாராட்டுகிறார் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும்!
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment