சென்னை, டிச 18 சென்னை எருக்க மாநகரில் சாலையை ஆக்கிரமித்து கட்டடம் கட்டப்பட்டு உள்ளதாகவும் இந்த ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும் எனவும் ரவீந்திர ராம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது சம்பந்தப்பட்ட கட்டட உரிமை யாளருக்கு விளக்கம் கோரி தாக்கீது அனுப்பப்பட்டுள்ளதாகவும் விளக்கம் கிடைத்த பிறகு நடவடிக்கை எடுக்க படும் என மாநகராட்சி தரப்பில் உறுதிமொழி அளிக்கபட்டது.
இதனை அடுத்து ஆக்கிரமிப்பு இருப்பின் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடபட்டது. உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி அதி காரிகள் அளித்த உறுதி மற்றும் நீதி மன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என கோரி சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, பொறியாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஒன்பதாவது மண்டல உதவி பொறி யாளர் பார்த்திபன் ஆகியோர்க்கு எதிராக ரவீந்திர ராம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஆக்கிரமிப்பு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட பிறகும் ஏன் இரண்டு ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் சம்பந்தப்பட்ட அதிகாரி களை பணியிட நீக்கம் செய்ய ஏன் உத்திரவிடக்கூடாது என கேள்வி எழுப்பினர். பின்னர் ஆக்கிரமிப்புகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை ஜனவரி முதல் வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.
No comments:
Post a Comment