தீ தான
மதவாதத்தின்
திரிநூலைப்
பொசுக்க
மத யானையை
அடக்க
திருப்பத்தூரில்
திரளுங்கள்!
சமூகநீதியின்
கழுத்தறுக்கும் - தீய
சக்திகளின்
சங்கை அறுக்க
வேண்டுமா?
திருப்பத்தூரில்
திரளுங்கள்!
தோழர்களே,
திகுதிகுவென!
மதச்சார்பின்மையை
மண்ணின்
வாசனையாக
மணக்கச்
செய்திட வேண்டுமா?
தினவெடுத்து
வாருங்கள்,
திருப்பத்தூருக்கே!
மூட முட்
செடிகளை
மூட்டும் தீயில்
உணவாக்க
பகுத்தறிவு ஒளி- எங்கும்
படர்ந்திட
புகுந்த வெள்ளமாய்ப்
புறப்படுவீர்,
பகுத்தறிவுப் பூமியாம்
திருப்பத்தூருக்கு!
புத்தம் புதிய
நூல்களின்
பூப்பறிக்கப்
புறப்படுவீர்!
எழிலும், எழுச்சியும்
கைகூப்பும்
எழிலார்ந்த
மாநாட்டுக்கு
வாரீர்! வாரீர்!!
தமிழர் தலைவர்
அழைக்கிறார்,
தட்டாமல்
வாரீர்! வாரீர்!!
No comments:
Post a Comment